தமிழ்விடு தூது
தமிழ்விடு தூது உ.வே.சா தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது. தூது இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று. ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் ‘தூது’ அழைக்கப்படுகிறது. தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும். தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியகாக ‘மாலையை வாங்கிவருமாறு ‘அன்னம் முதல் வண்டு ஈறாகப் […]