உ.வே.சாமிநாதர் (1855-1942)

உ.வே.சாமிநாதர்

  • ‘தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்படுபவர் உவே.சாமிநாதர்.
  • பைந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபடடவர் உ.வே.சாமிநாதர்.

உ.வே.சாமிநாதர் பெற்றுள்ள பட்டங்கள்

  • திராவிட வித்தியா பூஷணம்
  • மகா மகோ பாத்தியாய
  • தாஷிணாத்திய கலாநிதி

உ.வே.சாமிநாதர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய கல்லூரிகள்

  • சென்னை மாநிலக் கல்லூரி
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
  • உ.வே.சாமிநாதருக்கு டாக்டர் பட்டம் 1932ல் சென்னைப் பல்கலைகழகம் வழங்கியது.
  • உ.வே.சாமிநாதரின் திருவுருவச் சிலை, வங்கக்கடல் நோக்கி நிற்கும் வண்ணம், சென்னை மாநிலக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.
  • உவே.சாமிநாதர் பெயரால் உ.வே.சா. நூலகம் சென்னையில் அமைந்துள்ளது. திருவான்மியூரில்
  • உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது உயிர்மீட்சி.
  • இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர். பதிப்பாசிரியர் உ.வே.சாமிநாதர், ஆவார்.

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் – உ.வே. சாமிநாதர்

  • உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்படட உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை.

உ.வே.சாவின் கூற்று

மாணாக்கர்களுள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பது பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்றாகும்.

முதலில் வருபவன் வேத்தான் என்று சொல்வார்கள். மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது அதன் பொருள்.

பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால், பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம்.

பிள்ளைகளுக்கு மணல் தான் சிலேட்டு, பனையேடு தான் புத்தகம் எழுத்தாணியே பேனா

-உ.வே.சா.

தமிழச் சங்கமென்று சொல்லப்படுவனவும் ஒருவகை ஆராய்ச்சிப் பள்ளிக்கூடங்கள் அல்லவா?

-உ.வே.சா.

வடமொழி சொல்லும் தமிழ் பொருளும்

  • உபாத்தியாயர் – ஆசிரியர்
  • வித்தியாரம்பம் – கல்வித் தொடக்கம்
  • வித்தியாப் பியாசம் – கல்விப் பயிற்சி
  • அக்ஷராப் பியாசம் – எழுத்துப் பயிற்சி
  • சீதாள பத்திரம் – தாழை மடல்
  • குழி மாற்று – பெருக்கல் வாய்பாடு
  • கீழ் வாயிலக்கம் – பின்ன எண்ணின் கீழ்த்தொகை
  • மேல் வாயிலக்கம் – பின்ன எண்ணின் மேல் தொகை
  • நவ த்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

பள்ளிகள்

  • ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர் பள்ளி.

பள்ளிக்கூடம் உபாத்தியாயர்

  • மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. அதைக் குருகுலம் என்பார்கள்.
  • கணக்காயர் என்பது உபாத்தியாயருக்குப் பெயர்.
  • கணக்கு என்பது நூலின் பெயர்.

மன்றங்கள்

  • ஊர் தோறும் பொதுவான இடத்தில் மரத்தினடியில் மலை போன்று அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை மன்றம், அம்பலம் என்றும் கூறுவர்.
  • மன்றம் என்பது மரத்தினடியில் உள்ள திண்ணையே, அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது.

வித்தியாரம்பம்

  • முதன் முதலில் (ஐந்தாம்) 5ம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.
  • உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் சேர்ந்து சொல்வதை முறை வைப்பு என்று கூறுவார்கள்.
  • உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம் பிள்ளை முறை வைப்பதுண்டு.

மையாடல்

  • சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை தடவுவார்கள்.
  • அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
  • மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ‘மையாடல் விழா’ என்று சொல்வார்கள்.

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்

-தமிழ்விடு தூது

 

‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்

-சீவகசிந்தாமணி.

கையெழுத்து

  • எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரி கோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள்.

“கொம்புசுழி கோணாமல் கொண்ட பந்தி சாயாமல் அம்பு போல் கால்கள் அசையாமல் தம்பி எழுதினால் நன்மையுண்டு”

மனனப் பயிற்சி

  • தமிழில் நிகண்டு. நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக இருக்கும்.
  • கணிதத்தில் கீழ்வாயிலக்கம். மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் பாடமாக வேண்டும்.
  • மனனப் பயிற்சியை ‘தலை கீழ்ப் பாடம்’ என்று சொல்வர்.
  • சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பவை அகராதி வரிசையில் அமைந்தமை அவர்களுடைய ஞாபகத்தில் பதிவதன் பொருட்டேயாகும்.
  • அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை மோனைகளைக் கொண்டும் செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

சுவடிகள்

  • இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்துத் தருவார்.
  • ஒலையில் ஒரு துளை, இரண்டு துளை இடுவதும் உண்டு,
  • பனையேடு. சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
  • மேலே சட்டமாகப் பனை மட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள், மரச் சட்டங்களையும் அமைப்பார்கள், செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள்.
  • அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் சித்திரங்கள் எழுதுவதுண்டு.
  • இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதற்கு ‘நாராசம்’ என்று பெயர்.
  • சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கு என்று பெயர்.

எழுத்தாணிகள்

  • எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவர்.
  • மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள்,
  • ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப்
  • பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோற்றுகின்றது.
  • ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ளது மடக்கெழுத்தாணி.

ஏடெழுதும் வழக்கம்

  • ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக (இருபது முப்பது) 20-30 வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன.
  • மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாக ஆசிரியர்கள் ஏடுகளில் எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்குச் சட்டம் என்று பெயர்.
  • சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு. அசை என்று பெயர்.

வாதம் புரிதல்

  • கல்வியில் வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டி கொடிகட்டியிருப்பர் என்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.
  • இந்த வாதம்புரியும் பழக்கம் பாடசாலைகளிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது.
  • பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் நூல் பயிலும் இயல்பை விளக்க வந்த பழைய சூத்திரம் 

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மட நனி இகக்கும்”  – நன்னூல் 41

  • ஆட்சேபம், சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

ஓதற்பிரிவு

  • இல்லறம் நடத்தும் காலத்திற்கூட, வேற்று நாட்டுக்குச் சென்று கல்வியைக் கற்பித்தும் வாதம்புரிந்து வென்றனர். இங்ஙனம் பிரியுங் காலம் ஓதற்பிரிவு என்று தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
  • வேற்று நாட்டுக்குச் சென்று கல்வி கற்பதற்கு கால எல்லை (மூன்று) 3 வருஷம் என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
  • இவ்வாறு நவத்வீபம். தமிழ்நாட்டு முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்ற பண்டிதர்கள் பலர் இருந்தனர்.
  • தஞ்சாவூரில் இருந்த சர்வசிவ பண்டிதர் என்பவரிடம் அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்கள் என்னும் செய்தி, முதல் இராஜராஜ சோழன் கால, தஞ்சாவூர் சாஸனம் தெரிவிக்கின்றது.
  • பல வருஷ காலம் தமிழக் கல்லூரியாகவும், வட மொழிக் கல்லூரியாகவும் திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் ஆகியன விளங்கி வந்தன.

சாந்துணையும் கற்றல்

  • ஒருவன் இறக்குமளவும் படிக்கவேண்டும் என்பதை கல்லாதவாறு!’ என்ற குறளினால் திருவள்ளுவர் விதிக்கின்றார். ‘என் ஒருவன் சாந்துணையும்

இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை – பேராசிரியர் அ.கா. பெருமாள்

கற்பிக்கப்பட்ட நூல்கள்

  • கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும். இதற்காக பிரபவாதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.
  • நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
  • மாணவர்களுக்குக் பெரும்பாலும் நீதி நூல்கள் (ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை. நல்வழி) கற்பிக்கப்பட்டன.
  • வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் ஏற்றவாறு அமைத்த கணிதமுறை கட்டாயமாகக் கற்பிக்கப்பட்டன.

திண்ணைப் பள்ளிக்கூடங்களும் படித்தவர்களும்

திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும்

  • தமிழறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் மௌன குருவிடம் படித்திருக்கிறார்.
  • சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞரும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறார்.
  • மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடங்கள் படித்திருக்கிறார்.
  • நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள
  • கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
  • சிலப்பதிகார உரையாசிரியர் வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்
  • மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் வ. சுப. மாணிக்கம் மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!