இந்தியாவில் மிதவாத தேசியம்

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்

இந்திய தேசிய இயக்கத்தின் – மூன்று நிலைகள்

  1. மிதவாதி தேசியம் (1885 1905)
  2. தீவிரவாத தேசியம் (1906 – 1916)
  3. காந்தி காலம் (1917 – 1947)

மிதவாத தேசியம்

    • பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாயத்தில் மிதவாதிகள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தனர்.
    • கோரிக்கை மனுக்களை அளித்தல், தீர்மானங்கள் போடுதல், கூட்டங்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், தூதுக்குழுக்கள் மூலம் பேச்சு நடத்துதல் போன்ற வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர்.
    • அரசியல் உரிமைகளையும் தன்னாட்சியையும் படிப்படியாக அடைவதே அவர்களது குறிக்கோளாகும்.
    • ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை வரவேற்றது.
    • 1886ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் உறுப்பினர்களுக்கு தலைமை ஆளுநர் டப்ரின் பிரபு தேநீர் விருந்தளித்தார்.
    • காங்கிரசின் கோரிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, அரசாங்கம் அதற்கு எதிராகத் திரும்பியது.
  • தேசிய இயக்கத்தின் தொடக்க காலமான இந்த கட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி ஏ.ஓ.ஹியூம், டபிள்யூ.சி.பானர்ஜி, , தாதாபாய் நௌரோஜி, பெரோஸ் ஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, பண்டிட் மதன்மோகன் மாளவியா, பக்ருதீன் தியாப்ஜி, நீதிபதி ரானடே, ஜி. சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் முக்கிய தலைவர்களாக இருந்து வழி நடத்திச் சென்றனர்.
மிதவாதிகளின் முக்கிய கோரிக்கைகள்
  1. சட்டசபைகளை விரிவாக்குதல், சீர்திருத்துதல் 
  2. ஐ.சி.எஸ்.தேர்வுகளை ஒரே சமயத்தில் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நடத்தி உயர் பதவிகளில் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல்
  3. நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையை பிரித்தல்
  4. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்குதல்
  5. நிலவரியைக் குறைத்தல் – நியாயமற்ற நிலஉடைமையாளரிடமிருந்து குடியானவர்களை பாதுகாத்தல்
  6. உப்பு வரி, சர்க்கரை வரியை ஒழித்தல்
  7. ராணுவ செலவுகளைக் குறைத்தல்
  8. பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை கோருதல். 
  • ரானடே, கோகலே போன்ற ஒரு சில மிதவாதிகள் சமூக சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தினர். குழந்தை திருமணம், விதவைகளின் அவலம் போன்றவற்றை அவர்கள் எதிர்த்தனர்.
  • 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதும் மிதவாதிகளின் சாதனையாகும்.
மிதவாதிகளின் சாதனைகள் 
  1. மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை மிதவாதிகளால் உருவாக்க முடிந்தது.
  2. ஜனநாயகம்,சிவில் உரிமைகள், பிரதிநிதித்துவ நிறுவனங்கள் போன்ற சித்தாந்தங்களை அவர்கள் பிரபலப்படுத்தினார்கள்.
  3. பிரிட்டிஷார் எவ்வாறு இந்தியர்களைச் சுரண்டுகிறார்கள் என்று அவர்கள் மக்களுக்கு புரியவைத்தனர்.
மிதவாத தலைவர்கள்
தாதாபாய் நௌரோஜி
  • தாதாபாய் நௌரோஜி எழுதிய “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” என்ற நூலில் செல்வச்சுரண்டல் கோட்பாட்டை விளக்கியிருந்தார். 
  • இந்தியாவின் செல்வம் எந்தெந்த வழிகளில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் காட்டினார்.

அ. ஊதியங்கள்

ஆ. சேமிப்பு

இ. ஓய்வூதியங்கள்

ஈ. இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கான செலவினங்கள்

உ. பிரிட்டிஷ் வணிக நிறுவனங்களின் லாபம் 

  • இதைப்பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் வெல்பி குழுவை நியமித்தது. அதில் முதல் இந்திய உறுப்பினராக தாதாபாய் நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவிற்கான அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் இவர் கருதப்பட்டார். 
  • பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் இவரே ஆவார்.
  • ராஸ்ட் காப்தார் மற்றும் வாய்ஸ் ஆப் இந்தியா எனும் பத்திரிகைகளை நடத்தினார்.
  • தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
சுரேந்திரநாத் பானர்ஜி
  • வங்கப் பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்தார். 
  • 1876ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராடுவதற்காக இந்தியக் கழகம் ஒன்றை தோற்றுவித்தார்.
  • அவர் நிறுவிய இந்திய தேசியப் பேரவை (1883) பின்னர் 1886ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. 
  • பெங்காலி எனும் பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டார் 
  • சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியாவின் பர்க்’ என்று அழைக்கப்பட்டார்.
கோபால கிருஷ்ண கோகலே
  • 1905 ல் அவர் இந்தியப் பணியாளர் கழகத்தை தோற்றுவித்தார்.
  • நாட்டிற்காக தொண்டு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சியளிப்பதே இக்கழகத்தின் நோக்கமாகும்.
  • கோபால கிருஷ்ண கோகலே காந்தியின் குருவாக கருதப்பட்டவர்.
ஜி.சுப்ரமணிய அய்யர் 
  • சென்னை மகாஜன சபை மூலம் தேசியத்தை பரப்பினார். 
  • ‘தி இந்து’ 1878 & ‘சுதேச மித்ரன்’ 1882 போன்ற பத்திரிக்கைகளையும் அவர் நிறுவினார்.
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் தீர்மானத்தை நிறைவேற்றினார்
தமிழ்நாட்டின் முக்கிய மிதவாதிகள்
  1. சீனிவாச சாஸ்திரி
  2. P.S. சிவசாமி
  3. V.கிருஷ்ணசாமி
  4. T.R.வெங்கட்ராமனார்
  5. G.A.நடேசன்
  6. T.M.மாதவராவ்
  7. S.சுப்பிரமணியனார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!