மு.மேத்தா

  • மு. மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
மு. மேத்தா எழுதியுள்ள நூல்கள்
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு
  • கண்ணீர்ப் பூக்கள்
  • ஊர்வலம்
  • சோழ நிலா
  • மகுட நிலா
  • மு. மேத்தா திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • மு. மேத்தா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா.
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவரா மு. மேத்தாவைப் போற்றுவர்.
  • மு. மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
இளைய தோழனுக்கு – மு.மேத்தா
  • நமக்குள் துவண்டிருக்கும் நம்பிக்கையைத் தட்டி எழுப்பும் கவிதை
  • உள்ளத்தில் இருக்கவேண்டிய ‘கை’ ஒன்று உண்டு. அது நம்பிக்கை.
கவிதை

நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையது தான் ***

நட பாதங்கள் நடக்கத் தயாராய் இருந்தால் பாதைகள் மறுப்புச் சொல்லப் போவதில்லை. ***

நெய்யாய்த் திரியாய் நீயே மாறினால் தோல்வியும் உனக்கொரு தூண்டுகோலாகும்! ***

வெற்றி உனைச் சுற்றி வெளிச்சவிதை விதைக்கும்!

கவலைகளைத் தூக்கிக்கொண்டு திரியாதே. அவை கைக்குழந்தைகளல்ல.. ***

ஓடி வந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்! ***

தூங்கி விழுந்தால் பூமி உனக்குப் படுக்கையாகிறது. விழித்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது! **

நீ விழித்தெழும் திசையே பூமிக்குக் கிழக்கு! உன் விரல்களில் ஒளிரும் சூரியவிளக்கு! **

நட! நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட! *

-மு.மேத்தா

முந்தைய ஆண்டு வினாக்கள்

மு மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
(A) தமிழிலக்கிய வரலாறு
(B) தமிழின்பம்
(C) கள்ளர் சரித்திரம்
(D) ஆகாயத்துக்கு அடுத்த வீடு

மு.மேத்தா எழுதாத நூல் எது?
(A) கண்ணீர் பூக்கள்
(B) நடந்த நாடகம்
(C) ஊர்வலம்
(D) தண்ணீர் தேசம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!