February 2024

ஆகஸ்டு நன்கொடை & தனிநபர் சத்தியாகிரகம்

ஆகஸ்டு நன்கொடை ஆகஸ்ட் 1940 இல் வைஸ்ராய் லின்லித்கோ காங்கிரஸை திருப்திப்படுத்த சில சலுகைகளை வழங்கினார். போருக்குப் பிறகு வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து  வழங்குவதாக உறுதி வழங்கினார். புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும். அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரசப்பிரதிநிதியின் குழுவை (செயற்குழு) விரிவாக்கம் செய்தல் இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல் எனினும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி என்ற சலுகை, காங்கிரசுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனினும் […]

ஆகஸ்டு நன்கொடை & தனிநபர் சத்தியாகிரகம் Read More »

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள்

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல் 1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார். எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியுடன் வலியுறுத்தியபடி லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய ஜின்னா 1934 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டினார். காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் Read More »

இந்திய அரசு சட்டம், 1935

இந்திய அரசு சட்டம், 1935 இந்திய அரசுச் சட்டம் 1935, கீழ்ப்படியாமை இயக்கத்தின் முக்கியமான நேர்மறையான விளைவுகளில் ஒன்றாகும். சட்டத்தின் முக்கிய அம்சங்கள் இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு மாகாண சுயாட்சியை சட்டம் வழங்கியது. மாகாணங்களில் நடைமுறையில் இருந்த இரட்டை ஆட்சி இப்போது மத்திய அரசுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 11 மாகாணங்கள், 6 தலைமை ஆணையர் மாகாணங்களுடன் இணைந்து ஒரு “இந்தியக் கூட்டாட்சி”யினை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. இக்கூட்டச்சி அமைப்பில் சேர விரும்பும் சுதேச அரசுகள் சேர்வதற்கும் உரிமை வழங்கப்பட்டது.

இந்திய அரசு சட்டம், 1935 Read More »

பூனா ஒப்பந்தம் (1932)

பூனா ஒப்பந்தம் (1932) தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இது இந்துக்களை பிளவுபடுத்துவது மட்டுமின்றி, தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை அர்த்தமற்றதாக்கும் என்றும், அவர்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் காந்தி வாதிட்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவரான பி.ஆர். அம்பேத்கர், தனித் தொகுதிக்காக வலுவாக வாதிட்டார், ஏனெனில், அது அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தையும் அதிகாரத்தையும் வழங்கும். 20 செப்டம்பர் 1932 அன்று, காந்தி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தனித் தொகுதிகளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்

பூனா ஒப்பந்தம் (1932) Read More »

வட்ட மேசை மாநாடுகள்

வட்ட மேசை மாநாடுகள் சைமன் கமிஷன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபா ஆகியவை இதைப் புறக்கணித்தன. இந்த அறிக்கையைச் சட்டப்பூர்வமாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் ஆக்கும் நோக்கில் இந்தியக் கருத்தை உருவாக்கும் வல்லமை உடைய பலதரப்பட்ட தலைவர்களுடன் லண்டனில் ஒரு வட்டமேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. முதல் வட்ட மேசை மாநாடு முதல் வட்ட மேசை மாநாடு நவம்பர் 1930ல் லண்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்ட்,

வட்ட மேசை மாநாடுகள் Read More »

சட்டமறுப்பு இயக்கம்

சட்டமறுப்பு இயக்கம் காந்தி பதினோரு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் கொடுத்தார் மேலும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனவரி 31, 1930 அன்று காலக்கெடுவையும் விதித்தார். அவற்றில் சில ராணுவம் மற்றும் சிவில் சேவைகளுக்கான செலவினங்களை 50 சதவீதம் குறைத்தல். பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்துதல். அரசியல் கைதிகளை விடுதலை செய்தல். நில வருவாயை 50 சதவீதம் குறைத்தல். உப்பு வரியை ஒழிக்க வேண்டும். உப்பு சத்தியாகிரகம் மக்களின் கவனத்தை ஈர்க்க காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார், ஏனெனில் உப்பு என்பது

சட்டமறுப்பு இயக்கம் Read More »

நேரு அறிக்கை & பூரண சுயராஜ்ஜியம்

நேரு அறிக்கை சைமன் குழுவின் முன்மொழிவுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்கான அரசியலமைப்பை மோதிலால் நேருவின் கீழ் உருவாக்கும் நோக்கத்துடன் 1928ல் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது. 1928 இல் கல்கத்தா அமர்வில் இடதுசாரிகளை சமரசம் செய்ய 1929ல் ஜவஹர்லால் நேரு அடுத்த அமர்வின் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. பரிந்துரை இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து. கூட்டு மற்றும் கலப்பு வாக்காளர்களின் அடிப்படையில் மத்திய சட்டமன்றம் மற்றும் மாகாண சட்டமன்றங்களின் தேர்தல்களை நடத்துதல். முஸ்லிம்களுக்கு மத்திய சட்டமன்றத்திலும், அவர்கள் சிறுபான்மையினராக

நேரு அறிக்கை & பூரண சுயராஜ்ஜியம் Read More »

சுயராஜ்ஜியக் கட்சி & சைமன் குழு 

சுயராஜ்ஜியக் கட்சி சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் காங்கிரசில் புதிய செயல்பாடுகளை முன்மொழிந்தனர். அவர்கள் தேர்தல் அரசியலில் நுழைய விரும்பினர் மற்றும் தேசியவாதிகள் சட்டமன்றத்தை கைப்பற்றுவதன் மூலமும் தேசியவாத உணர்வைத் தூண்டுவதன் மூலமும் சட்டமன்ற செயல்பாட்டைத் தடுக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்பினர். சுயராஜ்ஜியம் என்றால் ‘சுதந்திரம்‘ அல்லது ‘சுய ஆட்சி‘ என்று பொருள். இந்தக் குழு ‘சுயராஜ்ஜியவாதிகள் மற்றும் மாற்றத்தை விரும்புவோர்‘ என்று அழைக்கப்பட்டது. ராஜகோபாலாச்சாரி, வல்லபாய் படேல் மற்றும் ராஜேந்திர பிரசாத்

சுயராஜ்ஜியக் கட்சி & சைமன் குழு  Read More »

ஒத்துழையாமை இயக்கம்

ஒத்துழையாமை இயக்கம் காரணங்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு இரண்டு உடனடி காரணங்கள் கிலாபத் மற்றும் பஞ்சாப் தவறுகள் ஆகும். கிலாபத் பிரச்சினை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உறுதிமொழிகளுக்கு எதிராக இசுலாமிய புனிதத் தலங்களின் கட்டுப்பாட்டை துருக்கிய சுல்தானிடமிருந்து இசுலாம் அல்லாத சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது ஜாலியன்வாலாவில் நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்காக பிரிட்டிஷ் விசாரணை நீதிமன்றங்கள் ரெஜினால்ட் டயர் மற்றும் மைக்கேல் ஓ‘டயர் ஆகியோரை முற்றிலுமாக விடுவித்தது. கிலாபத் இயக்கம் முதல் உலகப் போரில் துருக்கியின் சுல்தான், நேச நாடுகளுக்கு

ஒத்துழையாமை இயக்கம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)