மலை அருவி

வயலும் வாழ்வும் – மலை அருவி – கி.வா. ஜகந்நாதன்

நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல்,

போரடித்தல், நெல் பெறுதல் ஆகிய உழவுத் தொழில்களைப் பற்றிய பாடல்.

மலை அருவி – கி.வா. ஜகந்நாதன்

  • பல்வேறு தொழில் குறித்த நாட்டுப்பற பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
  • மலை அருவி நூலில் உழவுத்தொழில் பற்றிய பாடல் வயலும் வாழ்வும்.

நெல் போரடித்தல்

  • அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்துப் நெல்லைப் பிரிப்பர்.
  • நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செயவர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
  • மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் பாரடிக்கும் அழகான தென் மதுரை என்பது நாட்டுப்புறப்பாடல்

பாடல்

ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஒண்ணரைக் குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி ஏலேலோ

சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி சேத்துக்குள்ளே இறங்குறாங்க –

ஏலேலங்கிடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலே நண்டும் சேர்த்து பிடிக்கிறாங்க * *

– ஏலேலங்கிடி ஏலேலோ

ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் ஓடியோடி ட்டோமையா ** – ஏலேலங்கிடி ஏலேலோ

மட மடன்னு மடை வழியே மண் குளிரத்  தண்ணீர் பாய் – ஏலேலங்கிடி ஏலேலோ

சாலு சாலாத் தாளுவிட்டு நாலு நாலா வளருதம்மா -ஏலேலங்கிடி ஏலேலோ

மணி போலப் பால் பிடித்து மனதையெல்லாம் மயக்குதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் ஆளு பணம் கொடுத்துவாரான் – ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்து சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் – ஏலேலங்கிடி ஏலேலோ

கிழக்கத்தி மாடெல்லாம் கீழே பார்த்து மிதிக்குதையா * -ஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூரா கழலுதையா மணிமணியா – ஏலேலங்கிடி ஏலேலோ

சொல்லும் பொருளும்

  • குழி – நில அளவை பெயர்
  • சாண் -நீட்டல் அளவை பெயர்
  • சீலை – புடவை
  • மடை – வயலுக்கு நீர வரும் வழி
  • மணி – முற்றிய நெல்
  • கழலுதல் – உதிர்தல்
  • சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

 பாடலின் பொருள்

  • உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தை தேர்ந்தெடுத்தனர்.
  • பெண்கள் புடவையை இறுகக்கட்டி நெசவு செய்ய வயலில் இறங்கினர்.
  • நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.
  • ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
  • நடவு நட்ட வயலின் மண் குளிருமாறு மடை வழியே நீர் பாய்ச்சினர்.
  • நட்ட நெற் பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.
  • பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன.
  • அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.
  • அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.
  • கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.
  • மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!