பரஞ்சோதி முனிவர்

திருவிளையாடற் புராணம்

  • திருவிளையாடல் கதைகள் சிலப்திகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்துள்ளது.
  • பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
  • திருவிளையாடற் புராணம் (மூன்று) 3 காண்டங்களும் 64 படலங்களும் உடையது.

திருவிளையாடற் புராணத்தில் உள்ள (மூன்று} 3 காண்டங்கள்

    1. மதுரைக் காண்டம்
    2. கூடற் காண்டம்
    3. திருவாலவாய்க் காண்டம்

பரஞ்சோதி முனிவர்

  • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.
  • பரஞ்சோதி முனிவர் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சிவபக்தி மிக்கவர்

பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள நூல்கள்

  1. வேதாரண்யப் புராணம்
  2. திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
  3. மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி

திரு ஆலவாய்க் காண்டம்- 3

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் – 56

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலச் சுருக்கம்

  • பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குசேல பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்
  • கபிலரின் நண்பர் இடைக்காடனார்.
  • புலவர் இடைக்காடனார். தாம் இயற்றிய கவிதையினை மன்னன் குசேல பாண்டியன் முன்பு பாடினார்.
  • புலவர் இடைக்காடனார் பாடியதைப் பொருட்படுத்தாமல் குசேல பாண்டியன் அவமதித்தான்.
  • மனம் வருந்திய இடைக்காடனார். இறைவனிடம் முறையிட்டார்.
  • மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட் நீங்கி, வட திருஆலவாயில் சென்று தங்கினார்.
  • இதை அறிந்த குசேல பாண்டியன் தன் பிழையைப் பொருத்தருளுமாறு இறைவனை வேண்டி,இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான்
  • இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்

இடைக்காடனார் மன்னனின். வயில் கவிதை படித்தல்

பாடல்-2615*

கழிந்த பெரும் கேள்வியினான் (குசேல பாண்டியன்)

எனக் கேட்டு ***

முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொலிந்த பெரும்

காதல் மிகு கேண்மையினான் இடைகாட்டுப் புலவன்

தென்சொல் மொழிந்து அரசன் (குசேல பாண்டியன்)

தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித்

தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து

உரைப்பனுவல் வாசித்தான் (இடைக்காடனார்) ஆல்.

பாடலின் பொருள்

  • குசேல பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் மிகுந்த கல்வியறிவு மிக்கவன்’ எனக் கற்றோர் கூறக் கேட்டார் இடைக்காடனார் என்னும் புலவர்.
  • கலைகளை முழுவதும் உணர்ந்த நண்பர் கபிலன்.
  • கபிலனின் மேல் அன்புகொண்ட இடைக்காடனார்.
  • இடைக்காடனார் மிகவும் இனிய தேன் ஒழுகும் வேப்பமாலையினை அணிந்த குசேல பாண்டியனின் அவைக்குச் சென்று, தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.

 சொல்லும் பொருளும்

  • கேள்வியினாள் – நூல் வல்லான் (குசேல பாண்டியன்)
  • கேண்மையினான் – நட்பினன் (இடைக்காடனார்}

மன்னன் தன் புலமையை மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல்

பாடல்-2017

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர் நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே **

நகு தார் வேம்பன் (குசேல பாண்டியன்) பொன்நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்**

சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது

முடிதுளக் கான் ஆகி

பாடலின் பொருள்

  • இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே!
  • அழகிய வேப்ப மலர் மாலையை அணிந்த குசேல பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு,
  • குசேல பாண்டியன் முன் சொற்கூவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

சொல்லும் பொருளும்

  • தார் – மாலை
  • முடி – தலை

பாடல் – 2015

என்னை இகழ்ந்தனனோ

சொல் வடிவாய் நின் இடம் பிரியா இமையப் தன்னையும் சொல் பொருளான உன்னையும் இகழ்ந்தனன்**

என் தனக்கு யாது என்னா முன்னை மொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு  ஈர்ப்ப முந்திச் சென்றான்

அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி

பாடலின் பொருள்

  • இடைக்காடனார் இறைவனிடம், “குசேல் பாண்டியன் என்னை இகழவில்லை.
  • சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
  • அவரது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியின் சென்று தைத்தது

 சொல்லும் பொருளும்

  • முனிவு – சினம்

இறைவன் கோவிலைவிட்டு நீங்குதல்

பாடல் – 2020

போன இடைக்காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்

ஞானமய மாகிய தன் இலிங்கவுரு மறைத்து உமையாம் நங்கை யோடும் வானவர் தம் பிரானெழுந்து புறம்போய்த்

தன் கோவிலின் நேர் வடபால் வையை ஆனந்தித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இளிதின் அமர்ந்தான் மன்னோ (இறைவன்),

பாடலின் பொருள்

  • கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்.
  • இறைவன் ஞாமையமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலை விட்டு வெளியேறி
  • நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்குச் சென்று இருந்தார்.

சொல்லும் பொருளும்

  • அகந்து உவலக – மனமகிழ்ச்சி

 கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன் இறைவனை வேண்டுதல்

பாடல் -2629***

அல்லதை என் (குசேல் பாண்டியன்) தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில்  எய்திற்றாலோ*

தொல்லை மறையவர் ஒழுக்கம் தருமம் சுருங்கிற்றாலோ **

இல்லறனும் துறவறனும்  பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்! எந்தாய்!.

பாடலின் பொருள்

  • இறைவனே, என்னால், என் படைகளால் என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ?
  • எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் குசேல பாண்டிய மன்னன்..

சொல்லும் பொருளும்

  • தமர் – உறவினர்

இறைவனின் பதில்

பாடல்-2837

ஓங்கு தண் பணை சூழ் நீபவனத்தை நீத்து ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் கண்டாய் **

ஆயினும் நீயும் வேறு தீங்கு உளை அல்லை

காடன் செய்யுளை இகழ்தலாலே ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா

பாடலின் பொருள்

இறைவன் மன்னனிடம், “சிறந்த  குளிர்ந்த  வயல்கள்

சூழ்ந்தை  கடம்ப  வனத்தை  விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்

இடைக்காடனார்  பாடலை  இகழ்ந்த  குற்றம் தவிர வேறு

குற்றம் உன்னிடம் இல்லை .

இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு

இங்கு வந்தோம்” என்றார்.

சொல்லும் பொருளும்

  • நீப வனம் – கடம்ப வனம்

 மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல்

பாடல்-2638

பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரமயோகி (திருஆலவாய் இறைவன்) விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் (குசேல பாண்டியன்) கேட்டு

வானோர் புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது  பெருமை அன்றோ

எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான்  இறைஞ்சினானே

பாடலின் பொருள்

வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொற்க் கேட்டுப்

குசேல பாண்டிய மன்னன்.

“உமையை ஒருபாகத்திற் கொண்ட மேலான

பரம்பொருளே, புண்ணியனே,

சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா? என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டிப் போற்றினான்.

சொல்லும் பொருளும்

  • மீனவன் – பாண்டிய மன்னன்

மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்

பாடல் –2041 ****

விதி முறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம்

புதியதோர் நிறை நீர்க் கும்பங் கதலிகை புனைந்த

மன்றல் (குகேல் பாண்டியன் மாளிகை) ***/

கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கை

மேற்கற்றோர் சூழ மதி புனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி

பாடலின் பொருள்

குசேல பாண்டிய மன்னது மாளிகை வாழையும் கமுகும் சாமரையும் மெண்ணிற மேல் விதானமும் விளக்கும் உடையது

அன்றலர்ந்த மலர்களால் தொடுத்த மாலை பூரண கும்பம் கொடி ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது

போற்றத்தக்க ஒளியுடைய மணிகள் பதிக்கப் பெற்றது.

அங்குள்ள புலவர்கள் சூழ அறிவை அணிகலனாகப் பூண்ட இடைக்காடனாருக்கு மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்

சொல்லும் பொருளும்

  • கவரி – சாமரை ( கவரி மானின் முடியில் செய்த விசிறி)

மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்

பாடல் –2544

புண்ணியப் புலவீர், யான் இப்போழ்து இடைக்காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம்  பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வியோரும் மன்ன நீ (குசேல பாண்டியன) நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

பாடலின் பொருள்

புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று குசேல பாண்டியன் பணிந்து வணங்கினான்

‘’குசேல பாண்டியனே, நீ கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது” என்று நுண்ணிய கேள்வி அறிவுடைய புலவர்களும் கூறினர்

சொல்லும் பொருளும்

  • நுவன்ற – சொல்லிய

முந்தைய ஆண்டு வினாக்கள்

திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள்
(A) 5
(B) 3
(C) 7
(D) 6
(E) விடை தெரியவில்லை

“புலனழுக்கற்ற அந்தணாளன்” – எனப் பாராட்டப்படுபவர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது )
(A) ஓதலாந்தையார்
(B) நக்கீரர்
(C) பரணர்
(D) கபிலர்

திருவிளையாடற் புராணத்தில் உள்ள திருவிளையாடல்களின் எண்ணிக்கை
(A) 60
(B) 63
(C) 64
(D) 18
(E) விடை தெரியவில்லை

“இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே என்னா வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான் இப்பாடல் வரிகள் இயற்றிய ஆசிரியர்
(A) பாரதியார்
(B) பரஞ்சோதி முனிவர்
(C) பெருஞ்சித்திரனார்
(D) காரியாசான்

திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்
(A) நக்கீரன்
(B) பரஞ்சோதி முனிவர்
(C) தருமி
(D) சிவபெருமான்

“…சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்”- என்ற பாடலடியைப் பாடியவர்
(A) கபிலர்
(B) கம்பர்
(C) ஔவையார்
(D) பரணர்

திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் ‘திருவிளையாடல் புராணம்’
II.திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு
கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன
(A) I மற்றும் IIl சரியானவை
(B) II மற்றும் III சரியானவை
(C) III மற்றும் IV சரியானவை
(D) I மற்றும் IV சரியானவை

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!