சீறாப்புராணம்

சீறாப்புராணம் – உமறுப்புலவர்

ஹிஜிறத்துக் காண்டம் (செலவியற் காண்டம்)

மதீனம் புக்க படலம்

  • சிறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை என்பது பொருள் புராணம் என்றால் வரலாறு
  • அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம்.
  • நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று கூறிம் இலக்கியம் சீறாப்புராணம்,
  • வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் இயற்றினார் என்பர்
  • சீறாப்புராணம் 3 காண்டங்களையம் படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது.
  • சீறாப்புராணத்தில் உள்ள மூன்று காண்டங்கள் விலா தத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் ஹிஜிறத்துக் காண்டம்
  • இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையாக விளங்குவது சிறாப்பரா ம் சீறாப்புராணம் தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த நூல்.
  • சீறாப்புராணத்தில் காப்பிய இலக்கண நெறி நின்று மதீனா நகரினை உமறுப்புல்லர் புகழ்ந்து பாடியுள்ளார்.
  • ஒண் நகரம், மாநகரம், மனை நகரம். மாளிகை நகரம், செம்மை நகரம் பொன் நகரம், கொடை நகரம், ஆகிய தலைப்புகளில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

உமறுப்புலவர்

  • எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடி முத்துப் புலவரின் மாணவர் உமறுப்புலவர்,
  • நபிகள் நாயகத்தின் மீது முதுமொழி மாலை என்னும் நூலையும் உமறுப்புலவர் இயற்றியுள்ளார்
  • உமறுப்புலவரை வள்ளல் சீதக்காதி அப்துல் காசிம் மரைக்காயர் ஆகியோர் ஆதரித்தனர்.

சின்னச்சீறா – பனு அகமது ரைக்காயர்

  • சீறாப்புராணத்தை முடிப்பதற்கு முன்பு உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் சீறாப்புராணத்தை பனு அகமது மரைக்காயர் பாடி முடித்தார்.
  • சின்னச்சீறா என்று பனு அகமது மரைக்காயர் பாடிய பகுதி அழைக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனாவிற்கு இடமாற்றம்

ஹிஜிறத்துக் காண்டம் (செலவியற் காண்டம்) மதீனம் புக்க படலம்

  • நபிகள் நாயகத்திற்குக் மக்கா நகரத்தின் குறைசி இன மக்கள் கொடுமைகள் பல செய்தனர்.
  • நபிகள் நாயகம் மக்காவை விட்டு, மதீனாவிற்கு வரவேண்டுமென்று மதினா மக்கள் அழைத்தனர் அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்றார்.
  • இசுலாமிய அறநெறிகளை வளர்க்க நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனா நகரத்திற்குத் தம் துணைவரான அபூபக்கர் முதலானோருடன், முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் கடந்து மதீனா நகரத்தில் நுழைந்தார்.

ஹிஜிறத்

  • ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள்

 சீறாப்புராணம்உமறுப்புலவர்

தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மதீனா நகர் மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் ஹிஜிறத்துக் காண்டம் (செலவியற் காண்டம்) காட்சிப்படுத்துகிறது.

மதீனா நகர்

  • பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள் வளம் நிறைந்தது மதீனா நகர்.

மதினா நகரின் சிறப்பு

  • மாளிகை நகரம்,
  • கொடை நகரம்,
  • பொன் நகரம்,
  • மா றகரம்,
  • மனை நகரம்,
  • செம்மை நகரம்
  • ஒண் நகரம்,

மாளிகை நகரம்

பாடல்

வடவரை பொருவென மலிந்த மேனிலைக் கடலென் ஒலித்ததா வணத்தின் கம்பலைப் **

புடவியை அளந்தன போன்று விதிகள் நெருங்கின மாடம் எங்குமே

 பாடலின் பொருள்

  • மேரு மலையினைப் போன்று மதினா நகரின் மேன் உயர்ந்திருந்தன. அங்காட்கள் நிறைந்த தெருக்களில் எழுந்த ஒலி, பெருங் கடலொலி போன்று  இருந்தது
  • மதீனா நகரின் வீதிகள் பிரபஞ்சத்தைப் போன்று பரந்திருந்தன அந்நகரின் சிறிதும் இடைவெளியின்றி மாளிகைகள் நெருக்கமாக அமைந்திருந்தன

கொடை நகரம்

பாடல்

கலைவலார் கருத்தில் எண்ணிய(து) இலையெனா(து) அரும்பொருள் யாவும் எய்தலால்

மலைவிலா(து) அருளிய வள்ளியோரினும் தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர் {மதினா நகரம்) ***

பாடலின் பொருள்

  • பழைமையான மதினா நகரம், கலைஞர்களும் மறையவர்களும் நினைக்கின்ற பொருள் வளத்தைக் கொண்டது. அங்கு எந்தப் பொருளும் இல்லையென்று சொல்வதற்கு இல்லை
  • அப்படிக் கேட்போர்க்கும் அப்பொருளை எல்லாம் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டவர்கள் உண்டு அவ்வள்ளல்களை விடக் குறையாத பெரும் புகழைப் பெற்றது மதீனா நகரம்,

பொன்னகரம்

பாடல்

தோரணத் தொடும் கொடிக்காடு துன்னலால் வாரண மதமலை மலிந்து நிற்றலால்**

காரணத்தொடும் வரவாறு காணலால் பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர் (மதீனா நகரம்)

பாடலின் பொருள்

  • கட்டப்பட்ட தோரணங்களும் கொடிகளும் காடு போல நெருங்கியிருந்தன். மலை போன்ற யானைகள் அவ்விடத்தில் நிறைந்திருந்தன
  • வழிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன இவற்றால் முழுமை பெற்ற பூமியைப் போல மதீனா நகரம் பொன்னெனப் பொலிந்தது.

மனை நகரம்

பாடல் ***

சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால் புது மலர்த் தெருத்தொறும் சிந்திப்

பொங்கலால் எதிர் பணிந்(து) இடு விருந்து இனிதின் நல்கலால் வதுவையின் மனையென இருந்த மாநகர் {மதீனா நகரம் ***

பாடலின் பொருள்

  • மதீனா நகரத்தில் வெண் சுண்ணச் சாந்தினைக் கொண்ட மாளிகைகள் ஒளிர்ந்தன வீதிகளில் புதிய பூக்கள் சிந்திக் கிடந்தன. 37
  • ஒவ்வொருவரையும் அழைத்துக் கொடுக்கும் விருந்தானது இனிமையுடன் இருந்தது இதனால் அந்நகர் வீட்டைப் போன்று பொலிவுடன் காட்சிஅளித்தது

 மாநகரம்

பாடல்***

உறு பகை வறுமை நோய் ஓட ஒட்டி மே மனு முறைக் கோண்நடாத்தி ***

நீள நிறை தரு பெரும் புகழ் நிலை நிறுத்தியோர் மறுவிலாத அரசென இருந்த மாநகர் (மதீனா நகரம்)

பாடலின் பொருள்

  • பகை, வறுமை, நோய் முதலியவை மதீனா நகரிலிருந்து ஓடிவிட்டன.
  • மேலும், குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப்
  • பெரும் புகழ் பெற்ற சிறந்த அரசைப் பொலிவுடன் இருந்தது மதீனா நகரம் போலப்

ஒண்ணகரம்

பாடல்

தெண்டிரை ஆரமும் பூணுஞ் சிந்தலால்

விண்டு பற்பல பல மொழி விளம்பலால்

மண்டிய வளந்தலை மயங்கலால் மது உண்டவர் என மதர்த்(து) இருந்த ஒண்ணகர் (மதீனா நகரம்)

பாடலின் பொருள்

  • அலைகடலானது முத்தையும் பல்வேறு அணிகளையும் சிதறுவது போல்
  • மதீனா நகரில் மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்
  • தேன் அருந்தியவர்கள் மயங்குவது போலப் பலவாறான பொருள் வளத்தால் ஒளி பெற்றுத் திகழ்கிறது. மதீனா நகரம்

செம்மை நகரம்

பாடல் * * *

தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும் மானமும்

பூக்கதின் ***

மறனும் வெற்றியும் ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்த நல் தீன் எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்

பாடலின் பொருள்

  • மதீனா நகரில் தானம், ஒழுக்கம், தவம், ஈகை, மானம் முதலியன பூத்திருந்தன.
  • திண்ணிய வலிமை நல்கும் வெற்றி, அவ்வெற்றியைத் தருகின்ற குறைவற்ற ஊக்கம் முதலியன் காய்த்திருந்தன.
  • தீன் எனும் செல்வம் பழுத்திருந்த செம்மை பொருந்திய நகராக மதீனா இருந்தது.

சொல்லும் பொருளும்

  • வரை – மலை:
  • கம்பலை – பேரொலி
  • புடவி – உலகம்
  • எய்துதல் – பெறுதல்
  • துன்ன – நெருங்கிய
  • வாரணம் – யானை
  • பூரணம் – நிறைவு
  • நல்கல் – அளித்தல்
  • வதுவை – திருமணம்
  • கோன் – அரசன்
  • மறுவிலா – குற்றும் இல்லாத
  • தெண்டிரை – தெள்ளிய நீரலை
  • விண்டு – திறந்து
  • மண்டிய – நிறைந்த
  • காய்ந்த -சிறந்த
  • தீன் – மார்க்கம்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

_______ என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது
(A) சீதக்காதி வள்ளல்
(B) சடையப்ப வள்ளல்
(C) அபுல்காசிம்
(D) சந்திரன்சுவர்க்கி

“நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
(A) தேவாரம்
(B) கம்ப இராமாயணம்
(C) பெரிய புராணம்
(D) சீறாப்புராணம்

நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
(A) பனூ அகமது மரைக்காயர்
(B) சீதக்காதி
(C) உமறு புலவர்
(D) செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்

உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
(A) 120 பாக்கள்
(B) 204 பாக்கள்
(C) 80 பாக்கள்
(D) 67 பாக்கள்

கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?
(A) அப்துல் காதர்
(B) உமறுப்புலவர்
(C) அகமது மரைக்காயர்
(D) அபூபக்கர்

உமறுப்புலவரின் காலம்
(A) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
(B) கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
(C) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
(D) கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு

உமறுப்புலவர் யாருடைய வேண்டுகோளின்படி சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்?
(A) அப்துல் காதிர் மரைக்காயர்
(B) அபுல் காசிம்
(C) காதிர் முகைதீன்
(D) கடிகை முத்துப் புலவர்

கூற்று: 1 உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்
கூற்று:2 உமறுப்புலவரின் மற்றொரு நூல் முதுமொழிக் காஞ்சி
(A) கூற்று இரண்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று 1 மட்டும் சரி
(D) கூற்று இரண்டும் தவறு

சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B) சீதக்காதி
(C) அபுல்காசிம்
(D) திருநாவுக்கரசர்

சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
(A) நுபுவத்துக் காண்டம்
(B) விலாதத்துக் காண்டம்
(C) ஹிஜ்ரத்துக் காண்டம்
(D) மேற்கூறிய அனைத்தும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!