தமிழ் வரிவடிவ வளர்ச்சி
வரிவடிவ வளர்ச்சி எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன. பழங்காலத்தில் கற்பாறை. செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும் போது (வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால்) நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் (நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால்) வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக் கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக […]
