ஐரோப்பியர்கள் வருகை – பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சுக்காரர்கள்

  • 1664-ல் அமைச்சர் கால்பெர்ட்டின் அறிவுரையின்படி அரசர் பதினான்காம் லூயி பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கினார்.
  • 1668-ல் முதல் வணிக மையத்தினை பெர்பெர் என்பவர் ஔரங்கசீப்பிடம் அனுமதி வாங்கி சூரத்தில் நிறுவினார்.
  • தென்இந்தியாவில் தங்களது முதல் வணிக மையத்தை கோல்கொண்டா சுல்தானின் அனுமதியைப் பெற்று மசூலிப்பட்டினத்தில் 1669-ல் நிறுவினர்.
  • 1672-ல் மைலாப்பூரிலிருந்து டச்சுக்காரர்களை வெளியேற்றினர்.
  • பீஜப்பூரின் ஷேர்கான் லோடியிடம் அனுமதி பெற்று 1673-ல் நவீன பாண்டிச்சேரிக்கான அடித்தளத்தை பிரான்சிஸ் மார்டின் நிறுவினார்.
  • பாண்டிச்சேரியின் முதல் பிரெஞ்சு கவர்னராக நியமிக்கப்பட்ட பிரான்சிஸ் மார்ட்டின் புனித லூயி கோட்டையை கட்டினார்.
  • 1693-ல் பாண்டிச்சேரியை டச்சுக்காரர்களிடம் இழந்த பிரெஞ்சுகாரர்கள் 1697-ல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி பாண்டிச்சேரியை மீண்டும் பெற்றனர்.
  • 1725-ல் மாஹியையும், 1739-ல் காரைக்காலையும் தங்களின் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!