ஜி.யு. போப்

  • ஜி.யு. போப் அவர்களின் காலம் 1820-1908.
  • செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் டாக்டர் ஜி.யு. போப் ஆவார்.
  • ஜி.யு. போப் பாதிரியார் கனடா நாட்டில் பிறந்தவர் ஆவார்.
  • டாக்டர் ஜி.யு. போப், 1839-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார்.
  • ஜி.யு. போப் முதன் முதலாக தமிழ் உரையைப் படித்துச் சென்னை சாந்தோமில் சொற்பொழிவாற்றினார்.
  • ஆங்கிலேயரான ஜி.யு. போபின் தமிழுரை கூடியிருந்த சென்னை சாந்தோம் தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது.
  • ஜி.யு. போப் சிறிது காலத்திலேயே தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கினார்.
  • ஜி.யு. போப். திருக்குறள், திருவாசக ஆகிய நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தார்.
  • ஜி.யு. போப் அவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தஞ்சாவூரில் வாழ்ந்த போது தெளிவுற அறிந்தார்.
  • தஞ்சாவூரில் வாழ்ந்த போது தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் எழுதி வெளியிட்டார்.
  • தமிழ் மொழியை ஐரோப்பியர் கற்றுக் கொள்வதற்கு Tamil Hand Book நூல் ஒன்றை எழுதினார் ஜி.யு. போப்.
  • தமிழ் நூல்களை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ஜி.யு. போப்.
  • ஜி.யு. போப் ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாறு நூலை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார்.
  • பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் ஜி.யு. போப் கருதினார்.
  • ஜி.யு. போப் தமிழோடு (எழுபது) 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!