தன்னாட்சி இயக்கம்

  • பண்டைய ரோமானியப் பேரரசு மற்றும் நவீன பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் தன்னாட்சி பொதுவான அம்சமாக இருந்தது.
  • அயர்லாந்தில் 1880களில் தன்னாட்சி இயக்கம் வலுப்பெற்றது. வடக்கு அயர்லாந்தின் ஆறு நாடுகளில் அயர்லாந்து அரசாங்கச் சட்டம் (1920) மற்றும் பின்னர் தெற்கில் மீதமுள்ள 26 நாடுகளில் ஆங்கிலோ-ஐரிஷ் ஒப்பந்தம் (1921) மூலம் தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டது.

தன்னாட்சி இயக்கம்

  • 1914 இல் பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராகப் போரை அறிவித்தபோது, மிதவாத மற்றும் தாராளவாதத் தலைமைகள் பிரித்தானியக் கொள்கைக்கு தங்கள் ஆதரவை வழங்கின.
  • அதற்கு ஈடாக பிரித்தானிய அரசாங்கம் போருக்குப் பின் சுயராஜ்யத்தைக் கொடுக்கும் என்று நம்பப்பட்டது.
  • இந்தப் பின்னணியில் தான் பெசன்ட் இந்திய அரசியலில் நுழைந்தார். அவர் 1914 இல் தி காமன்வெல் என்ற வார இதழைத் தொடங்கினார்.
  • இந்த இதழ் மத சுதந்திரம், தேசிய கல்வி, சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியது.
  • ‘இங்கிலாந்தின் கடினமா தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கா தருணம்’ என்று அவர் அழைப்பு விடுத்தார்.
  • ஜூலை 14, 1915 இல் நியூ இந்தியா என்ற தினசரி செய்தித்தாளைத் தொடங்கினார்.
  • பம்பாயில் ஆற்றிய உரையில் அவர் தனது சுயராஜ்ஜியக் கருத்தை வெளிப்படுத்தினார்: “தன்னாட்சி மூலம் இந்த நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளைக் கொண்ட அரசை கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்
  • அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக அவர் 1915 செப்டம்பர் 28 இல் முறைப்படி அறிவித்தார்.
  • 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுமையற்ற தமது ஆதரவாளர்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து அன்னிபெசன்ட் அம்மையார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பிக்க முடிவுசெய்தார்.

தன்னாட்சி இயக்கத்தின் நோக்கங்கள்

  • பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியாவுக்கான தன்னாட்சியை நிறுவுதல்.
  • தாய்நாட்டின் பெருமையை இந்திய மக்களிடையே எழுப்புதல்.

திலகரின் தன்னாட்சி இயக்கம் 

  • ஏப்ரல் 1916 இல் பெல்காமில் நடைபெற்ற பம்பாய் மாகாண மாநாட்டில் திலகரின் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது.
  • திலகரின் தன்னாட்சி இயக்கம் மகாராஷ்டிரா (பம்பாய் நகரம் உட்பட), கர்நாடகா, மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரில் தொடங்கப்பட்டது.
  • திலகரின் தன்னாட்சி இயக்கம் ஆறு கிளைகளாகவும், அன்னி பெசன்ட் இந்தியா முழுவதும் துவக்கினார்.

பெசன்ட்டின் தன்னாட்சி இயக்கம்

  • 1916 செப்டம்பரில் மெட்ராஸில் தன்னாட்சி இயக்கத்தை பெசன்ட் அவர்களே துவக்கினார்.
  • கான்பூர், அலகாபாத், பெனாரஸ், மதுரா, காலிகட் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் நிறுவப்பட்டன.
  • இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை” என்று அறிவித்தார்.
  • ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, பி. சக்ரவர்த்தி மற்றும் ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி மற்றும் கலிகுஸ்மான் ஆகியோர் லீக்கின் உறுப்பினர்களாக இருந்ததில் இருந்து லீக்கின் பிரபலத்தை அறியலாம்.
  • 1917இல் பெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர்.
  • பெசண்டை ஆதரிப்பதற்காக, சர் எஸ். சுப்ரமணியம் தனது நைட் ஊட் பட்டத்தைத் துறந்தார்.
  • மதன் மோகன் மாளவியா, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற பல தலைவர்கள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் தங்களை தன்னாட்சி இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
  • அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” என கூறினார்
  • அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது (How India wrought for Freedom)  இந்தியா : ஒரு தேசம் (India : A Nation) எனும்  இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • ஹோம் ரூல் இயக்கத்தின் உறுப்பினர்கள் பி.பி.வாடியா தொழிற்சங்கங்களை உருவாக்குவதன் மூலம் தொழிலாள வர்க்கங்களை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
  • தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு 1917 ஆகஸ்டு 20 இல் அறிவித்தார்.
  • இந்த அறிக்கை ஒரே இரவில் பெசண்ட் அம்மையாரை விசுவாசிக்கு நிகராக மாற்றியது.
  • செப்டம்பர் 1917இல் அவர் விடுதலையானபோது அவர் 1917இல், இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருவூலத்தை செலவு செய்யும் அதிகாரம் கொண்ட தேர்தெடுக்கப்பட்ட சபையும், அந்தச் சபைக்கு கட்டுப்படும் அரசும் பிரிட்டிஷ் அரசுக்கு உள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் அல்லது போரின்போது இந்தியா செய்த சேவைகளுக்கு விருதாகவோ இல்லாமல் தேசிய தன்னுறுதி அடிப்படையில் தன்னாட்சியை இந்தியா கோரவேண்டும்.

                                      –அன்னிபெசண்ட் (1915 ஆம் ஆண்டு செப்டம்பர்)

தன்னாட்சி இயக்கத்தின் சரிவு

  • ‘Indian Unrest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்பம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
  • 1919 இல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது.
  • இந்திய தேசியவாதிகள் இடையே இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
  • மேலும் ஒரு பேரிடியாக, தன்னிச்சையான கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய ரௌலட் சட்டத்தை அரசு இயற்றியது.
  • இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1929 இல் இந்திய லீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.

தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம்

  • காந்தியின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்குவதற்கு வழிவகுத்து வெகுஜன அணிதிரட்டலுக்கான களத்தை தன்னாட்சி இயக்கம் தயார் செய்தன. 
  • ஆரம்பகால காந்திய சத்தியாக்கிரகிகள் பலர் ஹோம் ரூல் லீக்களில் உறுப்பினர்களாக இருந்தனர். 
  • ஆகஸ்ட் 1917 மாண்டேகு பிரகடனமும் மான்ட்ஃபோர்ட் சீர்திருத்தங்களும் ஹோம் ரூல் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டன. 
  • லக்னோவில் (1916) நடந்த மிதவாத-தீவிரவாத மீள் ஒன்றுகூடலில் திலகர் மற்றும் பெசன்ட் ஆகியோரின் முயற்சிகள் இந்திய தேசியவாதத்தின் ஒரு பயனுள்ள கருவியாக காங்கிரசை புத்துயிர் பெறச் செய்தன
  • இது நகரத்திற்கும் நாட்டிற்கும் இடையே ஒரு அமைப்பு ரீதியான இணைப்பை உருவாக்கியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!