பார்சி சீர்திருத்த இயக்கம் & சீக்கியர் சீர்திருத்த இயக்கம்

பார்சி சீர்திருத்த இயக்கம்

  • 1851 இல் பர்துன்ஜி நௌரோஜி & S.S.பெங்காலி என்பார் “ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
  • செய்தித்தாள்: ராஸ்டீ கோப்தார் (உண்மை விளம்பி).
  • இவ்வமைப்பின் தலைவர்கள் திருமண நிச்சயம், திருமணம், இறப்பு ஆகிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் விரிவான சடங்குகளை விமர்சனம் செய்தனர்.
  • குழந்தைத் திருமணம், சோதிடத்தைப் பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் எதிர்த்தனர்.
  • பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்.
  • இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது.

சீக்கியர் சீர்திருத்த இயக்கம்

நிரங்கரி இயக்கம்

  • நிறுவனர்: பாபா தயாள் தாஸ் 
  • நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு. சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின. 
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.

நாம்தாரி இயக்கம் 

  • நிறுவனர்: பாபாராம் சிங் 
  • நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது.
  • வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார்.
  • இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது, விதவை மறுமணத்தை ஆதரித்தது. 
  • வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடைசெய்தது. 

சிங்சபா ,1873, அமிர்தசரஸ்

  • சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. 
  • சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!