மாணிக்கவாசகர்

திருச்சாழல்- மாணிக்கவாசகர்

மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் மாணிக்கவாசகரின் திருச்சாழல்

இறைவனுக்குத் தாயும் தந்தையும் இல்லையா?

பாடல் – 1

கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினுங் காயில்

உலகனைத்துங் கற்பொடி காண் சாழலோ

 பாடலின் பொருள்

பெண்.1: சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?

பெண்.2: எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினந்தால் உலகம் அனைத்தும் கற்பொடியாகிவிடும்.

பாடல் – 2

கோலாலமாகிக் குரை கடல் வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என்னேடீ

ஆலாலம் உண்டிலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ.

பாடலின் பொருள்

பெண் 1: அக்காலத்தில் பாற்கடலைக் கடைந்த போது உண்டாகிய நஞ்சை சிவன் உண்டான். அதற்குக் காரணம் யாதோ ?

பெண் 2 :அந்த நஞ்சை இறைவன் உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அன்றே அழிந்து ஒழிந்திருப்பார்கள்.

 சொல்லும் பொருளும்

  • காயில் – வெகுண்டால்
  • அயன் – பிரமன்
  • ஆலாலம்  – நஞ்சு
  • அந்தம் – முடிவு
  • மால் – விஷ்ணு

ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள்

பாடல் – 3

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்து வித்தான் காணேடீ

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள் காண் சாழலோ.

பாடலின் பொருள்

பெண்.1: தான் முடிவு இல்லாதவனாக இருந்தும் அவனை அடைந்த என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தானே, இது என்ன புதுமை?

பெண்.2: உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையான பொருளாகும்.

பழிப்பது போலப் புகழும் பழமொழி நுட்பம்

  • இரண்டு அடி வாங்கினால் தான் திருந்துவாய் என்றால் வள்ளுவரிடம் வாங்கு
  • ஏய்! யாரங்கே ஆற்றில் பாலைக் கொட்டிவிட்டு ஒலமிடுவது? நீர்வீழ்ச்சி.

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘அழுது அடியடைந்த அன்பர்’ – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
(A) அருணகிரியார்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்

“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று இறைவன் யாரிடம் கூறினார்?
(A) சுந்தரர்
(B) அப்பர்
(C)மாணிக்கவாசகர்
(D) ஆண்டாள்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்’ என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருக்கோவையார்
(D) திருப்பள்ளியெழுச்சி

சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) திருஞானசம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்

பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) புறநானூறு
(D) பதிற்றுப்பத்து

‘புல்லாகிப் பூடாய்’ இடம்பெற்றுள்ள நூல்
(A) திருவாசகம்
(B) திருமந்திரம்
(C) தேவாரம்
(D) பதிற்றுப்பத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!