TNPSC MATERIAL

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர். தமிழ்ச் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் தேவநேயப் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர் தேவநேயப் பாவாணர். உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் தேவநேயப் பாவாணர். தேவநேயப் பாவாணர் பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர் ஆவார். சொல் ஆய்வுக் கட்டுரைகள் நூலை எழுதியவர் தேவநேயப் பாவாணர். தேவநேயப் பாவாணரின் நூல்கள் பாடப்பகுதியில் […]

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் Read More »

ஜி.யு. போப்

ஜி.யு. போப் அவர்களின் காலம் 1820-1908. செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் டாக்டர் ஜி.யு. போப் ஆவார். ஜி.யு. போப் பாதிரியார் கனடா நாட்டில் பிறந்தவர் ஆவார். டாக்டர் ஜி.யு. போப், 1839-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார். ஜி.யு. போப் முதன் முதலாக தமிழ் உரையைப் படித்துச் சென்னை சாந்தோமில் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான ஜி.யு. போபின் தமிழுரை கூடியிருந்த சென்னை சாந்தோம் தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. ஜி.யு. போப் சிறிது காலத்திலேயே தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கினார். ஜி.யு. போப்.

ஜி.யு. போப் Read More »

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் & சி. இலக்குவனார்

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார்). தமிழ் மொழியை உயர வேண்டுமானால் தமிழன் உயர வேண்டும் என முழக்கம் இட்ட முதல் சான்றோர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார். தமிழின் முக்கியத்துவம். அது ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில் தான் சிறப்புப் பெறுகிறது என்றார் தெ. பொ. மீனாட்சிசுந்தரம். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதை நாடக காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம்

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் & சி. இலக்குவனார் Read More »

உ.வே.சாமிநாதர் (1855-1942)

உ.வே.சாமிநாதர் ‘தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்படுபவர் உவே.சாமிநாதர். பைந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபடடவர் உ.வே.சாமிநாதர். உ.வே.சாமிநாதர் பெற்றுள்ள பட்டங்கள் திராவிட வித்தியா பூஷணம் மகா மகோ பாத்தியாய தாஷிணாத்திய கலாநிதி உ.வே.சாமிநாதர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய கல்லூரிகள் சென்னை மாநிலக் கல்லூரி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி உ.வே.சாமிநாதருக்கு டாக்டர் பட்டம் 1932ல் சென்னைப் பல்கலைகழகம் வழங்கியது. உ.வே.சாமிநாதரின் திருவுருவச் சிலை, வங்கக்கடல் நோக்கி நிற்கும் வண்ணம், சென்னை மாநிலக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது. உவே.சாமிநாதர் பெயரால்

உ.வே.சாமிநாதர் (1855-1942) Read More »

வையாபுரிப்பிள்ளை & ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வையாபுரிப்பிள்ளை வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தார். உ.வே.சாமிநாதருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து. ஆய்வு செய்து வெளியிட்டவர் வையாபுரிப் பிள்ளை. இலக்கியங்களை ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்து அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்தவர் வையாபுரிப் பிள்ளை. கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர் வையாபுரிப்பிள்ளை. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகவும் பதிப்பாசிரியராகவும் செயற்பட்டவர் வையாபுரிப்பிள்ளை. கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து

வையாபுரிப்பிள்ளை & ந.மு.வேங்கடசாமி நாட்டார் Read More »

மறைமலையடிகள்

மறைமலையடிகள் காலம் 1876-1950 மறைமலையடிகளின் இயற்பெயர் சுவாமி வேதாசலம். ‘சுவாமி வேதாசலம்’ எனும் தன் பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். மறைமலையடிகள் பரிதிமாற்கலைஞருடனான நட்பின் காரணமாக ‘தனித்தமிழ்’ மீதான பற்று மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார் மறைமலையடிகள். மறைமலையடிகள் இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்தார். மறைமலையடிகள் சிறந்த இதழாளராகத் திகழ

மறைமலையடிகள் Read More »

பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) (திராவிட சாஸ்திரி)

பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) (திராவிட சாஸ்திரி) பரிதிமாற் கலைஞர் காலம் 1870-1903. பரிதிமாற் கலைஞருக்கு பெற்றோர் தனக்கு இட்ட பெயர் சூரியநாராயண சாஸ்திரி. சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். ‘திராவிட சாஸ்திரி’ என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர். தமிழை உயர் தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் பரிதிமாற் கலைஞர். பின்னாளில்

பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) (திராவிட சாஸ்திரி) Read More »

கா.ப.செய்கு தம்பி பாவலர் & திரு.வி. கலியாணசுந்தரனார்

கா.ப.செய்கு தம்பி பாவலர் சதாவதானம் என்னும் கதையில் சிறந்து விளங்கியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர். 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் (நூறு) 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி என்று பாராட்டுப்பெற்றார் கா.ப.செய்குதம்பிப் பாவலர். கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்வர். கா.ப.செய்குதம்பிப் பாவலர் (பதினைந்து) 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றர். கா.ப.செய்குதம்பிப்

கா.ப.செய்கு தம்பி பாவலர் & திரு.வி. கலியாணசுந்தரனார் Read More »

இரா.பி.சேது பிள்ளை

இரா.பி.சேது பிள்ளை சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் இரா.பி.சேது பிள்ளை, செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இரா.பி.சேது பிள்ளை. இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல் இரா.பி.சேது பிள்ளை எழுதிய தமிழின்பம் என்னும் நூல் ஆகும். இரா.பி.சேது பிள்ளை எழுதியுள்ள நூல்கள் தமிழகம் ஊரும் பேரும் தமிழ் விருந்து ஆற்றங்கரையினிலே மேடைப்பேச்சு கடற்கரையினிலே தமிழறிஞர், வழக்குரைஞர். மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், எனப் பன்முகத் திறன் பெற்றவர் இரா.பி.சேது

இரா.பி.சேது பிள்ளை Read More »

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

வரிவடிவ வளர்ச்சி எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன. பழங்காலத்தில் கற்பாறை. செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும் போது (வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால்) நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் (நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால்) வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக் கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக

தமிழ் வரிவடிவ வளர்ச்சி Read More »

error: Content is protected !!