TNPSC MATERIAL

புறநானூறு- 1 ஒளவையார்

ஒளவையார் அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றார், அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர். நமக்குக் கிடைத்துள்ள ஔவை பாடிய 59 பாடல்கள் விபரம் அகநானூற்றில் –  4 நற்றிணை – 7 குறுந்தொகையில் – 15 புறநானூற்றில் – 33 மொத்தம்  – 59 பாடல் – 206 வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் […]

புறநானூறு- 1 ஒளவையார் Read More »

அகநானூறு-3 அம்மூவனார்

அகநானூறு – அம்மூவனார் அம்மூவனார் அகப்பாடல்கள் மட்டும் பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். அம்மூவனார் நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். அம்மூவனாரின் பாடல்கள் இடம்பெற்றுள்ள எட்டுதொகை நூல்கள் -நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு. திணை –  நெய்தல் கூற்று – தலைமகன் பாங்கற்கு உரைத்தது  பாடல்-140 பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் * இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்றூழ் விடர குன்றம் போகும் கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை

அகநானூறு-3 அம்மூவனார் Read More »

புறநானூறு-3 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல்கள் புறநானூற்றில் (1) ஒன்றும் பரிபாடலில் (1) ஒன்றும் இடம் பெற்றுள்ளன. பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாயந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். திணை  –  பொதுவியல் திணை துறை  –   பொருண்

புறநானூறு-3 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி Read More »

அகநானூறு 4 – கவின்மிகு கப்பல் – மருதன் இளநாகனார்

மருதன் இளநாகனார் மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து (35)பாடல்களையும் பாடியவர் மருதன் இளநாகனார். மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. பாடல் – 255 உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் * புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட கோடு உயர்திணி  மணல் 

அகநானூறு 4 – கவின்மிகு கப்பல் – மருதன் இளநாகனார் Read More »

அகநானூறு 2 – வீரை வெளியன் தித்தனார்

வீரை வெளியன் தித்தனார் வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலைவி தினைப்புளம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பதை ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது போன்ற பாடலை வீரை வெளியன் தித்தனார் எழுதியுள்ளார். திணை   –  குறிஞ்சி துறை  –  இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. பாடல் 188 பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! இருண்டு உயர் விசும்பின் வலனேர்பு வளைஇப், * போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறை புரிந்து அறன்

அகநானூறு 2 – வீரை வெளியன் தித்தனார் Read More »

அகநானூறு 1

அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. நெடுந்தொகை நானூறு என்றும் அகநானூறினை அழைப்பர். பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு. ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ வழியாக சொல்ல வந்த கருத்தை உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு. அகநானூறு 145 புலவர்களால் பாடப்பட்ட நானூறு (400) பாடல்களைக் கொண்ட தொகுப்பு. அகநானூறின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு. அகநானூறு மூன்று (3)பிரிவுகளை உடையது. அவை களிற்றியானை நிரை மணிமிடை பவளம்

அகநானூறு 1 Read More »

புறநானூறு-3 குடபுலவியனார்

நீர்நிலைகளை உருவாக்கிய பாண்டியன் நெடுஞ்செழியனை போற்றிய பாடல் நீர்நிலைகளை உருவாக்குபவர்களை “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றியது திணை  –  பொதுவியல் திணை துறை  – முதுமொழிக்காஞ்சி பொதுவியல் திணை வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும். செய்திகளையும். முன்னர் விளக்கப்படாத முது மொழிக் காஞ்சித் துறை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முது மொழிக் காஞ்சித் துறை பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது பாடல் – 18:

புறநானூறு-3 குடபுலவியனார் Read More »

பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார்

பதிற்றுப்பத்து எட்டுதொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பத்து (10)பேரின் சிறப்புகளை எடுத்து இயம்புவது பதிற்றுப்பத்து. பதிற்றுப்பத்து பாடாண் திணையில் அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் முதல் பத்துப் (10) பாடல்களும் இறுதிப் பத்துப் (10) பாடல்களும் கிடைக்கவில்லை. பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன. பதிற்றுப்பத்தில் பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. பாடப்பகுதிப் பாடலுக்குச் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் படைவீரர் பகைவர் முன்

பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார் Read More »

புறநானூறு- 2 பிசிராந்தையார்

பிசிரந்தையார் பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். பிசிரந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் அறிவுடை நம்பி. அரசனுக்கு அறிவுரை செல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் பிசிரந்தையார் ஆவார்.  திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ. செவியறிவுறூஉ துறை அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன்  கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்  பாடல் –184 * காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

புறநானூறு- 2 பிசிராந்தையார் Read More »

புறநானூறு 1

புறநானூறு எட்டுதொகை நூல்களுள் ஒன்று. புறநானூறு, புறத்திணை சாரந்த நானூறு (400) பாடல்களைக் கொண்டது. புறம், புறப்பாட்டு என்றும் புறநானூறு வழங்கப்படுகிறது. புறநானூறு அகவற்பாக்களால் ஆனது. பல்வேறு வரலாற்றுச்செய்திகள் அடங்கிய தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கருவூலமாகத் புறநானூறு திகழ்கிறது புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பண்டைக்காலத் தமிழக வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை, போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுக்கல் குறித்தும் குறுநில மன்னர்கள், வேளிர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளையும் தமிழ் மக்களின்

புறநானூறு 1 Read More »

error: Content is protected !!