சிறுபாணாற்றுப்படை – நத்தத்தனார் 1

சிறுபாணாற்றுப்படை

  • சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத் தத்தனார்.
  • ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் சிறுபாணாற்றுப்படை.
  • சிறுபாணாற்றுப்படை 269 அடிகளை உடைய நூல்.
  • சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று..
  • பரிசுப்பெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட பாண்னை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக சிறுபாணாற்றுப்படை அமைந்துள்ளது.
  • வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சிறுபாணன் பயணம்

  • சிறுபாணன் பயணம் பற்றிய குறிப்பை மா.இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் – நல்லூர்
  • சிறுபாணன் பயணம் முடித்த இடம் – கிடங்கில் (திண்டிவனம்)
  • சிறுபாணன் சென்ற வழி
    • நல்லூர் 8-கல் எயிற்பட்டினம் (மரக்காணம்) 12- கல் வேலூர் (உப்பு வேலூர்) 11-கல் – ஆமூர் (நல்லாமூர்) 6 -கல்

ஈகை செயல் பழமொழி நானூறு

  • ஈகை செயலே பெருமைக்குப் புகழ் சேர்ப்பது என்பதை, அறிமடமும் சான்றோர்க்கு அணி என்று பழமொழி நானூறு கூறுகிறது. **

வள்ளல் குமணன் – முதிர மலை

  • புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல் குமணன்.
  • குமணன் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று) ஆட்சி செய்த குறுநில மன்னன் ஆவான்.
  • புறநானூறு 158- 164, 165 ஆகிய பாடல்களிலும் குமணனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

குமணனும் இளங்குமணனும்

  • குமணன் தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் குமணன் காட்டில் மறைந்து வாழ்ந்தான்.
  • இளங்குமணன் தன் அண்ணன் குமணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான்.

குமணனும் பெருந்தலைச் சாத்தனாரும்

  • தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் குமணன் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளால், “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” குமணன் கேட்டுக் கொண்டான்.
  • இதனால் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று குமணன் போற்றப்படுகிறான்.

கடை ஏழு வள்ளல்களும் – ஆண்ட நாடுகளும்

  • மலையமான திருமுடிக்காரி – மலாடு, திருக்கோயிலூர், தென்பெண்ணை, விழுப்புரம் மாவட்டம்,
  • நல்லியக்கோடன் – ஓய்மா நாடு திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
  • அதியமான் நெடுமான் அஞ்சி – பூரிக்கல், தகடூர், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி)
  • ஓரி (வல்வில் ஓரி) – கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம்
  • நள்ளி (நளிமலை நாடன்) – நெடுங்கோடு மலை, ஊட்டி, உதகமண்டலம், கோவை மாவட்டம்
  • போகன் – பொதினி, ஆவினன்குடி, பழனி, திண்டுக்கல் மாவட்டம்
  • குமணன் – முதிர மலை, பழனி மலைத்தொடர்களில் ஒன்று. திண்டுக்கல் மாவட்டம்
  • பாரி – பறம்புமலை, பிரான்மலை 300 ஊர்கள், சிவகங்கை மவட்டம், சிங்கம்புணரி
  • ஆய் அண்டிரன் – பொதிய மலை, அகத்தியர் மலை, திருநெல்வேலி குற்றாலம், பாபநாசம்

அக்கால ஊர் பெயரும் தற்கால பகுதியும்

  • கிடங்கில் – திண்டிவனம்
  • ஓய்மா நாடு  – திண்டிவனம்
  • எயிற்பட்டினம் – மரக்காணம்
  • மலாடு – விழுப்புரம்
  • வேலூர் – உப்பு வேலூர்
  • தகடூர், பூரிக்கல் – தருமபுரி
  • கொல்லி மலை – நாமக்கல்
  • நெடுங்கோடு மலை, ஊட்டி  – கோவை
  • பொதினி, ஆவினன்குடி, பழனி – திண்டுக்கல்
  • முதிர மலை, பழனி மலைத்தொடர் – திண்டுக்கல்
  • பறம்புமலை, பிரான்மலை – சிவகங்கை சிங்கம்புணரி
  • பொதிய மலை, அகத்தியர் மலை – திருநெல்வேலி குற்றாலம்

வள்ளல்களும் பாடப்பட்டுள்ள பாடல் எண்களும்

  • போகன் – 84-87
  • பாரி – 87-91
  • மலையமான் திருமுடிக்காரி – 91-95
  • ஆய் அண்டிரன் -95-99
  • அதியமான் நெடுமான் அஞ்சி -99-103
  • நள்ளி (நளிமலை நாடன்) – 103-107
  • ஓரி (வல்வில் ஓரி) – 107-111
  • நல்லியக்கோடன் – 111 – 115
  • குமணன் –  158-164, 165

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!