ஆய் அண்டிரன் – பொதிய மலை, அகத்தியர் மலை, நெல்வேலி குற்றாலம், பாபநாசம்
பொதியமலை ஆய் -(95-99)
பாடல்
நிழல் திகழ் நீலம், நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த (ஆய்)
சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும்
சொல்லும் பொருளும்
- நிழல் – ஒளி வீசும்
- நீலம் – நீலமணி
- நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு
- ஆலமர் செல்வன் – சிவபெருமான்
- அமர்ந்தனன் – விரும்பினன்
- சாவம் – வில்
பாடலின் பொருள்
- ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல்.
- ஆய் இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவன், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன் ஆய்.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.