பேகன் – பொதினி, ஆவினன்குடி, பழனி, திண்டுக்கல் மாவட்டம்
பொதினி மலை – பேகன்-(84-87)
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் (பேகன்)
அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் **
பா வகை – நேரிசை ஆசிரியப்பா
சொல்லும் பொருளும்
- வளமலை – பழநி மலை
- கவாஅன் – மலைப்பக்கம்
- கலிங்கம் – ஆடை
பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலானது குளிரால் நடுங்கும் என்று எண்ணித்தன் மனத்தில் சுரந்த அருளினால் பேகன் தன்னுடைய ஆடையைக் கொடுத்தான்.
இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்; வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன்; பொதினி மலைக்குத் தலைவன் பேகன்.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.