நல்லியக்கோடன் – ஓய்மா நாடு. தின வனம், விழுப்புரம் மாவட்டம்
நல்லியக்கோடன் – (111-115)
பாடல்
என ஆங்கு எழுசமங் கடந்த எழுஉறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் (நல்லியக்கோடன்)
செந்நுகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதான்
தாங்கிய உரனுடை நோன்தாள் (நல்லியக்கோடன்) **
பாடலின் பொருள்
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர்
- ஆனால் தான் தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்து செல்லும் வலிமை உடையவன் நல்லியக்கோடன்.
சொல்லும் பொருளும்
- உறழ் – செறிவு
- நுகம் – பாரம்.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.