மருதன் இளநாகனார்
- மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
- கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து (35)பாடல்களையும் பாடியவர் மருதன் இளநாகனார்.
- மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
- இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
பாடல் – 255
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் *
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடு உயர்திணி மணல் அகன்துறை நீகான் மாடஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய
-மருதன் இளநாகனார்
பாடலின் பொருள்
- உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்
- நாவாய் புலால் நாற்றமுடைய அலை வீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
- இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
- உயர்ந்க கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
சொல்லும் பொருளும்
- உரு – அழகு
- வங்கம் – கப்பல்
- போழ – பிளக்க
- எல் – பகல்
- வங் கூழ் – காற்று
- கோடு உயர் – கரை உயர்ந்த
- நீ கான் – நாவாய் ஓட்டுபவன்
- மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.