அகநானூறு 4 – கவின்மிகு கப்பல் – மருதன் இளநாகனார்

மருதன் இளநாகனார்

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து (35)பாடல்களையும் பாடியவர் மருதன் இளநாகனார்.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
  • இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

பாடல் – 255

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் *

புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ

இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட

கோடு உயர்திணி  மணல்  அகன்துறை நீகான் மாடஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய

-மருதன் இளநாகனார்

பாடலின் பொருள்

  • உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்
  • நாவாய் புலால் நாற்றமுடைய அலை வீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
  • இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
  • உயர்ந்க கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.

சொல்லும் பொருளும்

  • உரு  – அழகு
  • வங்கம்  – கப்பல்
  • போழ – பிளக்க
  • எல் – பகல்
  • வங் கூழ் – காற்று
  • கோடு உயர் – கரை உயர்ந்த
  • நீ கான் – நாவாய் ஓட்டுபவன்
  • மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!