இன்பத்தமிழ் & பில்கணீயம் – பாரதிதாசன்

இன்பத்தமிழ் – பாரதிதாசன்

  • குழந்தையைக் கொஞ்சுவது போல தமிழுக்குப் பல பெயர்கள் சூட்டி மகிழும் பாரதிதாசனின் கவிதை.
  • இன்பத்தமிழ் பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்என்ற நூலில் தமிழ்என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.
  • தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது.

கவிதை

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

– பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

  • நிருமித்தஉருவாக்கிய
  • சமூகம் – மக்கள் குழு
  • விளைவுவளர்ச்சி
  • அசதிசோர்வு

இன்பத்தமிழ்க் கல்வி – பாரதிதாசன்

  • தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கூறும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை.
  • இன்பத்தமிழ் கல்வி, ‘பாரதிதாசன் கவிதைகள்என்ற நூலில் தமிழ்பேறுஎன்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.

கவிதை

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான் **

ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்

காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்

ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர் அன்பினைச் சித்திரம் செய்க என்றார்

சோலைக் குளிர்தரு தென்றல் வரும் பசுந்தோகை மயில் வரும் அன்னம் வரும்

மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும் மாணிக்கப் பரிதி காட்சி தரும்

வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர் வெற்பென்று சொல்லி வரைக என்னும்

கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து கூவின என்னை

இவற்றிடையே இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்**

அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே * *

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் ! * *

-பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

  • கழனிவயல்
  • கார் முகில்மழை மேகம்
  • எத்தனிக்கும் – முயலும்
  • பரிதி – கதிரவன்
  • அன்னதோர் – அப்படி ஒரு
  • நிகர் – சமம்
  • வெற்பு – மலை
  • துயின்றிருந்தார்உறங்கியிருந்தார்

புரட்சிக்கவி (பில்கணீயம்) – பாரதிதாசன்

  • மக்களாட்சி தத்துவத்தை கூறும் காவியம் பில்கணீயம்.
  • உதாரன், அமுதவல்லி காதல் காவியம்

பில்கணீயம்

  • வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் காவியத்தைத் தழுவி, தமிழில் புரட்சிக்கவி பாரதிதாசனால் 1937ல் எழுதப்பட்டது.

முன்கதைச் சுருக்கம்

  • தன் மகள் அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையினைப் பயிற்றுவிக்க அரசன் ஒருவன் விரும்புகிறான். அதற்காக அமைச்சரிடம் கருத்துரை கேட்கிறான்.
  • அமைச்சர் உதாரன் பெயரை முன்மொழிந்து, ‘அவன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன்என்று கூறுகிறார்.
  • தன் மகள் எளிய கவிஞரோடு காதல் வயப்படுவாளோ என எண்ணி அரசன் தயங்குகிறான். அதற்கு அமைச்சர் ஓர் உத்தியைக் கூறுகிறார்.
  • அதன்படி உதாரன் பார்வையற்றவன் என்று அமுதவல்லியிடம் கூறுகின்றனர்.
  • இதுபோலவே உதாரனிடம் அமுதவல்லி தொழுநோயாளி என்று தெரிவிக்கின்றனர்.
  • இருவருக்கும் இடையில் திரையிடப்படுகிறது.
  • உதாரன், அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தருகிறான். ஓர் இரவுப்பொழுதில் அழகிய நிலவினைக் கண்டு உதாரன் தன்னை மறந்து கவிதை ஒன்றைப் பாடுகிறான்.
  • பார்வையற்ற ஒருவன் நிலவின் அழகைக் கண்டு எவ்வாறு கவி பாட முடியும் என்று ஐயம் கொண்ட அமுதவல்லி திரையினை விலக்கினாள்.
  • அழகிய ஆண் மகன் இருக்கக் கண்டு அவனை விரும்பத் தொடங்குகிறாள்.
  • உதாரனும் அழகான அமுதவல்லியைக் கண்டு விருப்பம் கொள்கிறான்.
  • இருவருக்கும் இடையே அன்பு மலர்கிறது இவர்களின் விருப்பம் அரசனுக்குத் தெரியவருகிறது.
  • இதனை விரும்பாத அரசன், உதாரனைக் குற்றவாளியாக்கி மரண தண்டனை விதிக்கிறான்.
  • அமுதவல்லி அதை எதிர்க்கிறாள். அதனால், சினம் கொண்ட மன்னன் இருவருக்கும் சேர்த்தே மரண தண்டனை விதிக்கிறான்.
  • இதனைத் தொடர்ந்து வரும் இக்காவியத்தின் இறுதிப்பகுதி இங்குப் பாடமாக இடம்பெற்றுள்ளது.

உயிர் எமக்கு வெல்லமல்ல

  • காதலனைக் கொலைக்களத்துக்கனுப்பக் கண்டும் கன்னி எனை(அமுதவல்லி) மன்னிக்கக் கேட்டுக்கொண்ட நீதி நன்று மந்திரியே!
  • அவன் (உதாரன்) இறந்தால் நிலைத்திடும் என் உயிர் (அமுதவல்லி) எனவும் நினைத்து விட்டாய்!
  • சாதல் எனில் இருவருமே (உதாரன், அமுதவல்லி) சாதல் வேண்டும், தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும். *** ஓதுக இவ்விரண்டில் ஒன்று மன்னவன் வாய்! உயிர் எமக்கு வெல்லமல்ல!என்றாள் மங்கை (அமுதவல்லி).

பா வகை: எண் சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

கடைசிப் பேச்சு

கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகாரங்கள் கொண்டவரும் காதலரும் (உதாரன், அமுதவல்லி) ஓர் பால் நின்றார்

அலைகடல் போல் நாட்டார்கள் வீடு பூட்டி அனைவருமே வந்திருந்தார்.**

உதாரனுக்கும் சிலைக்கு நிகர் மங்கைக்கும்(அமுதவல்லி) கடைசியாகச் சில பேச்சுப் பேசிடுகஎன்று சொல்லித் தலைப்பாகை அதிகாரி விடை தந்திட்டான்

தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கம் செய்வான், **

பேரன்பு கொண்டவரே, பெரியோரே, என் பெற்ற தாய்மாரே, நல் இளஞ் சிங்கங்காள்!

நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாகப்,

பெருவிலங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின் நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம் போராடும் பாழ் நிலத்தை அந்த நாளில் புதுக்கியவர் யார் ? **

அழகு நகர் உண்டாக்கி! சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி

நெற் சேர உழுதுழுது பயன் விளைக்கும் நிறை உழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?*

கற்பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்து தந்த கை தான்யார் கை ?

பொற்றுகளைக் கடல் முத்தை மணிக்குலத்தைப் போய் எடுக்க அடக்கிய மூச்செவரின் மூச்சு? **

ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

அரசனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண்டாக அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்பதே தான்

சரியென்றேன், ஒப்பவில்லை! * *

இவளும் (அமுதவல்லி) நானும் சாவதென்றே தீர்ப்பளித்தான், சாக வந்தோம்!

ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! *** இருவர் இதோ சாகின்றோம் ! நாளை நீங்கள் இருப்பது மெய் என்றெண்ணி இருக்கின்றீர்கள்!

மாசில்லாத உயர் தமிழ்

தமிழ் அறிந்ததால் வேந்தன் எனை (உதாரன்) அழைத்தான் தமிழ்க்கவி என்றெனை அவளும் (அமுதவல்லி) காதலித்தாள்!

அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ், என் (உதாரன்) ஆவி அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ ? ***

ஐயகோ! என் தாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ? உமை (உதாரன்) ஒன்று வேண்டுகின்றேன் மாசில்லாத உயர் தமிழை உயிர் என்று போற்றுமின்கள்! **

மக்களுக்கே ஆளும் உரிமை

அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை ஆளுதற்குப் பிறந்த ஒரு பெண்ணைக் கொல்ல அரசனுக்கோ அதிகாரம் உங்களுக்கோ?

அவ்வரசன் சட்டத்தை அவமதித்தான்

சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறிய கதை! நமக்கெல்லாம் (உதாரன்)

உயிரின் வாதை ! ***

அரசன் மகள் (அமுதவல்லி) தன் நாளில் குடிகட்கெல்லாம் ஆளுரிமை பொதுவாக்க நினைத்திருந்தாள்!

ஆழ்க எந்தன் குருதி

வாழிய என் நன்னாடு பொன்னாடாக! வாழிய நற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே***

வீழியபோய் மண்ணிடையே விண் வீழ்கொள்ளி வீழ்வது போல் தனித்தாளும் கொடிய ஆட்சி! * *

ஏழையினேன் கடைசி முறை வணக்கம் செய்தேன்! என் பெரியீர், அன்னையீர், ஏகுகின்றேன்! ஆழ்க என்றன் குருதியெலாம் அன்பு நாட்டில் ஆழ்க என்றான்! **

தலை குனிந்தான் கத்தியின் கீழ்!

கொலையாளி உயிர் தப்பல்

படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து பார்ப்பது போல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கிருந்தோர்

ஆவென்று கதறினாள்! ‘அன்பு செய்தோர் படி மீது வாழாரோ?’ என்று சொல்லிப்

பதைபதைத்தாள்! (அமுதவல்லி) இது கேட்ட தேச மக்கள் கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார், அந்தக் கொலையாளர் உயிர் தப்ப ஓடலானார்!

செல்வமும் உரிமையும் மக்களுக்கே

கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்! காவலன் பால் தூதொன்று போகச் சொன்னார், ‘புவியாட்சி தனி உனக்குத் தாரோம் என்று போய் உரைப்பாய்என்றார்கள்!

போகா முன்பே செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!

செல்வமெலாம் உரிமைஎலாம் நாட்டாருக்கே நவை இன்றி எய்துதற்குச் சட்டம் செய்தார்! நலிவில்லை! நலம் எல்லாம் வாய்ந்ததங்கே! **

சொல்லும் பொருளும்

  • ஓதுகசொல்க
  • முழக்கம் – ஓங்கி உரைத்தல்
  • கனிகள் – உலோகங்கள்
  • படிகம்பளபளப்பான கல்
  • மணிமாணிக்கம்
  • மீட்சி – விடுதலை
  • படிஉலகம்
  • நவை – குற்றம்

மக்களாட்சி

  • மக்களாட்சிக்கு முன்பு வரை சட்டம், நிருவாகம், நீதி ஆகியவை அரசனிடமே குவிந்து இருந்தன.
  • இந்நிலை சிறிது சிறிதாக மக்கள் புரட்சியால் மாற்றப்பட்டுத் தற்பொழுது மக்களாட்சி முறை பல்வேறு நாடுகளில் மலர்ந்துள்ளது.
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள்.
  • மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு.
  • அரசு என்பது மக்களுக்கானதே என்று காலந்தோறும் இலக்கிய வடிவங்களின் மூலம் கவிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!