Contents show
ஓரி (வல்வில் ஓரி) – கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம்
கொல்லிமலை -ஓரி (107-111)
பாடல்
நளிசினை நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த (ஓரி)
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் *
பாடலின் பொருள்
சொறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த. சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல்.
காரி என்னும் வலிமை மிக்க குதிரையைக் கொண்டவன் காரி
காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன் ஓரி,
ஓரி என்னும் வலிமை மிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன் ஓரி.
சொல்லும் பொருளும்
- நளிசினை – செறிந்த கிளை,பெரிய கிளை
போது – மலர்
கஞலிய – நெருங்கிய
நாகு – இளமை
குறும்பொறை – சிறு குன்று
கோடியர் – கூத்தர்
மலைதல் – போரிடல்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.