தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகள் பற்றி விளக்குக.

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகளும் அதிகாரங்களும்: 

  • மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சொத்துப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்தல்.
  • மாநிலத்தின் கொள்கைகளை உருவாக்குவது, தீர்மானிப்பது மற்றும் அவைகளை சிறப்பாக அமுல்படுத்துவது.
  • சட்டசபையின் சட்டமியற்றும் திட்டங்களை அது தீர்மானித்தல் மற்றும் அனைத்து முக்கிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்துதல்.
  • நிதிக்கொள்கையை முடிவு செய்தல் மற்றும் மாநிலத்தின் பொது நலத்திற்கான வரியமைப்பை வடிவமைத்தல்.
  • சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கான திட்டங்களை தீட்டுதல், பல்வேறு துறைகளில் மாநிலத்தைத் தலையெடுக்கச் செய்வது.
  • துறைத்தலைவர்களின் முக்கியமான நியமனங்களைச் செய்தல்.
  • மற்ற மாநிலங்களுடனான சிக்கல்மீது விவாதித்து முயற்சிகள் மேற்கொண்டு முடிவெடுப்பது.
  • துணை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி ஆளுநருக்கு ஆலோசனைக் கூறுதல்.
  • ஐந்தாண்டுத் திட்டங்களில் மாநிலப் பணியின் பங்கை பரிசீலித்து மற்றும் அதன் கடமைப்பாடுகளை தீர்மானித்தல். 
  • மாநில நிதி இருப்புகளிலிருந்து செய்கின்ற செலவினத்திற்காக முன்வரைவை உருவாக்குவது.
  • சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சாதாரண மசோதாக்கள் அல்லது பண மசோதாக்கள் ஆகிய அனைத்து மசோதாகளையும் தீர்மானித்தல்.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரும் தொடர்புடைய மேற்பார்வையிடுகிறார், கட்டுப்படுத்துகிறார். மற்றும் ஒருங்கிணைக்கிறார். மற்றும் துறையை
  • வரவுசெலவுத்திட்டம் என அழைக்கப்படுகின்ற வருடாந்தர நிதிநிலை அறிக்கை அமைச்சரவையால் இறுதிசெய்யப்பட்டு நிலைபடுத்தப்படுகிறது.
  • மாநிலத்தில் சட்டத்துறையின் குறிப்பாக சட்டசபையின் வழிகாட்டியாகவும், எஜமானாகவும் அமைச்சரவை இருக்கிறது. அதுதவிர, மாநிலத்தின் பொதுக் கொள்கைகளை உருவாக்குபவர்களாகவும், அமுல்படுத்துபவர்களாகவும் அமைச்சர்கள் உள்ளனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!