நற்றிணை – போதாயனார்

நற்றிணை

  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது நற்றிணை ஆகும்.
  • நல்ல திணை‘ என்று அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது நற்றிணை.
  • நற்றிணை, நானூறு (400) பாடல்களைக் கொண்டது.
  • நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
  • நற்றிணையில் கடவுள் வாழ்த்துப்  பாடியவர் பரதம் பாடிய பெருந்தேவனார்.
  • நற்றிணை, 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைச் பேரல்லையாகவும் கொண்டது.
  • நற்றிணையின் பேரெல்லை 12 அடி. விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக போதாயனரின் பாடல் அமைந்துள்ளது.

போதாயனார்

நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளவர் சங்ககாலப் புலவர் போதாயனார்.

பாடலின் சுருக்கம்

தித்திக்கும் தேனும் பாலும் பொற்கிண்ணத்தில் கலங்க ஒருவாய் சுவைக்கவும் ஒவ்வாமை காட்டி முத்துப் பந்தலில் ஓடி விளையாடி மூச்சிறைக்க வைத்த செல்லச் சிறுமகள்

மலர்ச்செண்டும் தோற்க வளமனை சாடி மறுகை மறுத்து மறைவாள் அன்று

இன்றோ ஒருநேர உணவே அமிழ்தென நுகரும் பெருந்தனப் பாங்கு பெற்றது எங்கே?

இல்லவன் செல்வத்து இருப்புக்கு ஏற்ப பிறரை நயவாப் பொருளியல் பெருமிதம் பேரறிவு ஒழுக்கம் பெற்றது எப்படி?

நற்றிணை – போதாயனார்

விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் கூறுவது.

 திணை  –  பாலை

துறை  – மகள் நிலை உரைத்தல்

மகள் நிலை உரைத்தல் துறை விளக்கம் *

  • “மகள் நிலை உரைத்தல்” என்பது தலைவனோடு உடன்போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது.
  • மனை மருட்சி” என்றும் மகள் நிலை உரைத்தல் துறை கூறப்படும். *

கூற்று மற்றும் கூற்று விளக்கம்

  • தலைவி இல்லறம் ஆற்றும் செவ்வியைப் பாராட்டிச் செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.
  • திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த செவிலி, நற்றாயிடம் மகள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதைச் சொல்லி, இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல்

பாடல்-110 *

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண் என்று

ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத்

தத்துற்று அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇ

மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனன்  கொல்  கொண்ட  கொழுநன் குடிவறன்

உற்றெனக்  கொடுத்த  தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு  மதுகையளே

– போதனார்

பாடலின் பொருள்

  • நம் வீட்டில் தேன் கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டுச் செவிலித் தாயார் ஒரு கையில் ஏந்தி வருவர்
  • நம் மகளை உண்ண வைப்பதற்காக இன்னாரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறு கோலை வத்திருப்பர்.
  • வீட்டின் முற்றத்தில் பந்தரின கீழ் இதை உண்பாயாக’ எனச் செல்லமாக அக்கோலால் அடித்து வேண்டுவர்
  • மகளோ .’நான் உண்ணேன்என  மறுத்து முத்துப்பரல்கள் இட்ட பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள்.
  • செவிலித்தாயார் அவளைப் பின்தொடர முடியைமல் நடை தளர்ந்து நிற்பர்.
  • இப்படிப்பட்ட விளையாட்டுப் பெண், நம் மகள். இவள் எப்படி இப்போது இத்தகைய அறிவையும் இல்லற நடைமுறையும் கற்றாள் ?
  • தான் மணந்துகொண்ட கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி நினைத்துப் பாராள்.
  • ஓடுகின்ற நீரில் கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பது போல் ஒரு பொழுது இடைவெளி விட்டு ஒரு பொழுது உண்ணும் வன்னம் பெற்றிருக்கிறாள் இது என்ன வியப்பு?”

சொல்லும் பொருளும்

  • பிரசம்  –  தேன்
  • புடைத்தல் –  கோல்கொண்டு மிரட்டுதல்
  • வறன் – வறுமை
  • உள்ளாள் – நினையாள்
  • கொழுநன் குடி – கணவனுடைய வீடு
  • கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
  • மதுகை  –  பெருமிதம்

முந்தைய ஆண்டு வினாக்கள்

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? (5 Times Asked)
(A) பெருந்தேவனார்
(B) போதனார்
(C) பரணர்
(D) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

நற்றிணையின் பேரெல்லை 12 அடியாக இருப்பினும் விதி விலக்காக 13 அடி கொண்ட பாடலை எழுதியது யார்?
(A) கபிலர்
(B) நக்கீரர்
(C) மாறனார்
(D) போதனார்

“வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
(A) பனையோலைப் பெட்டி
(B) வயல்
(C) வட்ட வடிவு
(D) எல்லை

“வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்”
-இந் நற்றிணைப் பாடலில் ‘சின்னாள்’ என்பது
(A) சில நாள்
(B) சிறு நாள்
(C) சிறிய ஆள்
(D) சின்ன ஆள்

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே” இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) புறநானூறு
(B) நற்றிணை
(C) ஏலாதி
(D) கலித்தொகை

எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல் (2 Times Asked)
(A) குறுந்தொகை
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுப்பத்து

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”
(A) குறுந்தொகை
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) கலித்தொகை

நற்றிணை ______ சிற்றெல்லையும் ______ பேரெல்லையும் கொண்ட நூல்.
(A) 4,8
(B) 3, 6
(C) 9, 12
(D) 13, 31

கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.
1. அகப்பொருள் பற்றிய, ‘நற்றிணை’ நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
(A) I மற்றும் III சரியற்றவை
(B) II மற்றும் IV சரியற்றவை
(C) III மற்றும் IV சரியற்றவை
(D) I மற்றும் II சரியற்றவை

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!