பேரறிஞர் அண்ணா

  • தென்னகத்துப் பெர்னாட் ஷா என்று பேரறிஞர் அண்ணா அழைக்கப்படுகிறார்.
  • முதன் முதலில் தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக பரப்பியவர் பேரறிஞர் அண்ணா.
  • அண்ணா, 1935ல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
  • முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார் அண்ணா, சென்னை மாகாணத்தைத் தமிழ் நாடு என்று பெயர் மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் அண்ணா.
  • பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் வீட்டிற்கோர் புத்தகசாலை இடம்பெற்றுள்ளது.
  • பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர்.

பேரறிஞர் அண்ணாவுக்கு அரசுகளின் மரியாதை

  • மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட (ஐந்து) 5 ரூபாய் நாணயத்தை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.
  • தமிழ்நாடு அரசு 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவு அடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்

  • இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
  • மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை.
  • தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை. தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
  • நல்ல வரலாறுகளைப் படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
  • கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.
  • வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
  • சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
  • இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள்

  • சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
  • இன்ப ஒளி

அண்ணா துனை ஆசிரியராக பணியாற்றி இதழ்கள்

  • குடியரசு
  • விடுதலை

அண்ணா ஆசிரியராக பணியாற்றி இதழ்கள்

  • ஹோம் ரூல்
  • ஹோம் லேண்ட்
  • காஞ்சி
  • மாலை மணி
  • நம் நாடு
  • திராவிட நாடு

அறிஞர் அண்ணாவின் சில மேற்கோள்கள்

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்!

அறிஞர் அண்ணா

களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகை தான் அதற்குச் சான்று

அறிஞர் அண்ணா

பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா

“அவர் (பெரியார்) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்?

எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?

எனவே தான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் ஒரு காலகட்டம் ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்.”

அறிஞர் அண்ணா

வீட்டிற்கோர் புத்தகசாலை

வீட்டிற்கோர் புத்தகசாலை பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

ஆபிரகாம் லிங்கன்.

உலகில் சாகா வரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!.

கதே

அண்ணாவின் வானொலி உரை

  • உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம். உலகின் மற்ற பாகங்களைப் பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.
  • உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட, வளர்ந்துகொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம்.

நாட்டு நிலை

  • உலக நிலைக்கு ஏற்ப, நாட்டு நிலை வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாற வேண்டும்.
  • நாட்டுக்கோர் நல்ல நிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம்.

மன வளம்

  • மாநிலம் மதிக்கும் மன வளம் வேண்டும்.
  • ஒரு நாட்டை உலகம் மதிப்பது, மலை கண்டு, நதி கண்டு, மாநிதி கண்டு அல்ல, அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கொண்டே.
  • வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால், நமது நாட்டில் நிச்சயமாக மன வளத்தைப் பெற முடியும்.
  • எழுத்தறிவு அற்றவர் – கல்வி பெற்றவர்கள்
  • எழுத்தறிவு அற்றவர் ஏராளம் இந்நாட்டில் இது பெருங்கேடு.
  • கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது மன வளம் இருக்கிறதா?
  • கல்வி பெற்றவர்களின் வீடுகளாவது நாட்டுக்குச் சிறப்பளிக்கும் நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகளாக, நாட்டுக்கு வலிவும் வனப்பும் தேடித்தரும் கருத்துகள் மலரும் சோலைகளாக உள்ளனவா என்றால், இல்லை என்று பெருமூச்சுடன் கூறித்தான் ஆகவேண்டும்.
  • உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால், நாட்டு நிலை கண்டு உலகம் மதிக்க வேண்டுமானால், இந்தச் சூழ்நிலையை மாற்றியாக வேண்டும்.

முன் சந்ததியார்கள்

  • முன் சந்ததியர்களின் காலம். அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்களுக்கு. குரு பாடங்களைச் சொல்லித்தரும் முறையும், ஏடும் எழுத்தாணியும், இருந்த காலம்.

தற்கால சந்ததியார்கள்

  • நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன.
  • இப்போது உள்ள காலம் உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மாக்களும் பாராளும் காலம்.
  • இப்போது உள்ள காலம் மன் வளத்தை அதிபப்படுத்தும் மார்கம் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
  • இதோ நான் பேசுகின்றேன். நீங்கள் கேட்கிறீர்கள். இடையே பலபல மைல்கள். இந்த ஒலி கேட்பது அறிவின் துணை கொண்டு.
  • விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் (வாணொலி) நமக்குக் கிடைத்திருக்கிறது.
  • இவ்வளவு வசதிகள் நமக்கிருக்கிறது.
  • இந்த அதிசயச் சாதனங்கள் (வாணொலி) இல்லாதிருந்த நாட்கள் நமது முன்னோர்கள் காலம்.
  • ஏன். மன வளம் இவ்வளவு குறைவாக இருக்கிறது?
  • வீடுகளிலே மன வளத்தை அதிகரிக்கவோ பாதுகாக்கவோ நாம் முயற்சி செய்வதில்லை. வழிவகை தேடிக் கொள்வதில்லை.

வீடுகளில் புத்தகசாலை இருக்காது

  • வீடுகளில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் இருக்கும். பீரோக்கள் இருக்கும்.
  • அவைகளில் வெள்ளித் தாம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர்ச்செம்பும் இருக்கும்.
  • பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும்.
  • மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்கு இருக்கும்.
  • அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளில் கூட புத்தகசாலை இருக்காது.

முதல் இடம் புத்தகசாலைக்கு

  • அலங்கார பொருள்களுக்கும் போக-போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலை மாறி, வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்!
  • உணவு, உடை, அடிப்படைத் தேவை அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்.

புத்தகசாலைக்கு தேவையான நூல்கள்

  • மக்களின் மனங்களிலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய உலகை அறிய, ஏடுகள் வேண்டும்.
  • உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்.
  • பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும்.
  • நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும்.
  • சாமானியரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தால் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் மக்கள் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல்கள் இருக்க வேண்டும்.
  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள். மக்களின் மன மாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள் வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
  • நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல. அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
  • வீட்டிலே அமைக்கும் புத்தகசாலையில் கேட்டினை நீக்கிட தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
  • இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக்கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்.

புத்தகங்கள் வாங்கும் பழக்கம்

  • வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும் போது.
  • பரிசளிப்புகள் நடத்தும் போது புத்தகங்கள் வாங்குகின்ற பழக்கத்தைக் கைகொள்ள வேண்டும்.
  • புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது
  • ஏற்படுத்திக்கொண்டால், சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை அமைத்து விடலாம்.

புத்தகசாலையின் அவசியம்

  • மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது சிரிப்பு மட்டுமன்று, சிந்திப்பதும் தான்.
  • சிந்தனையைத் தூண்டுவது கற்றல் மட்டுமன்று, நூல்களும் தான்.
  • உலகமெங்கும் பயணம் செல்லும் பட்டறிவை நூலுலகம் தருகிறது.
  • நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும்.
  • இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன நூல்களே. ஆதலின் வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை.
  • வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை என்பதை வலியுறுத்துகிறது அறிஞர் அண்ணாவின் வானொலி உரை.

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு’ என்று கூறியவர்
(A) அண்ணா
(B) காந்தி
(C) அம்பேத்கர்
(D) மு.வரதராசனார்
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
(A) 2005
(B) 2004
(C) 2003
(D) 2006

‘பெருவெற்றி அல்லவோ அண்ணா என முழக்கமிட்டாய்’ என்று அறிஞர் அண்ணா யாருக்குக் கடிதம் எழுதினார்?
(A) தங்கைக்கு
(B) தம்பிக்கு
(C) மக்களுக்கு
(D) உறவினருக்கு
நில மடந்தையும் தம் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு, விளையாட்டுக் காட்டுவாள் வேண்டி, “உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு!” என்று அன்பு ஆணையிடுகிறாள் என எழுதியவர் யார்? (2)
(A) பெரியார்
(B) அறிஞர் அண்ணா
(C) ஜவஹர்லால் நேரு
(D) காந்தியடிகள்

‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்
(A) சங்கரதாச சுவாமிகள்
(B) பம்மல் சம்மந்த முதலியார்
(C) அறிஞர் அண்ணா
(D) தி.க.சண்முகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!