SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள்
திருக்குறள் உரை
- திருக்குறளுக்கு முற்காலத்தில் (பதின்மர்) 10 பேரால் உரை எழுதப்பட்டுள்ளது.
- திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
- திருக்குறளுக்கு உரை எழுதிய (பத்து) 10 பேர்கள்
மணக்குடவர் காளிங்கர்
பரிமேலழகர் பரிதி
திருமலையர் பரிப்பெருமாள்
தாமத்தர் தருமர்
நச்சர் மல்லர்
திருவள்ளுவ மாலை
- திருக்குறளின் பெருமையை விளக்க, திருவள்ளுவ மாலை என்னும் நூல் எழுதப்பட்டு இருக்கின்றது.
- திருக்குறளைப் போற்றி புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
திருவள்ளுவர்
- திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் (இரண்டாயிரம்) 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
- எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை திருவள்ளுவர் வகுத்துக் கூறியுள்ளார்.
- உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் திருவள்ளுவர்.
- திருவள்ளுவரைப் பற்றிய அறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
திருவள்ளுவருக்கு சிறப்புப் பெயர்கள்
செந்நாப் போதார் – நான்முகனார் மாதானு பங்கி
பொய்யில் புலவர் பெரு நாவலர் பொய்யா மொழி புலவர் தேவர்
முதற் பாவலர் – வான் புகழ் வள்ளுவர் தெய்வப் புலவர் நாயனார்
திருவள்ளுவருக்கு தமிழக அரசின் கௌரவம்
- தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.
- திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.