பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார்

பதிற்றுப்பத்து

  • எட்டுதொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து
  • சேர மன்னர்கள் பத்து (10)பேரின் சிறப்புகளை எடுத்து இயம்புவது பதிற்றுப்பத்து.
  • பதிற்றுப்பத்து பாடாண் திணையில் அமைந்துள்ளது.
  • பதிற்றுப்பத்தில் முதல் பத்துப் (10) பாடல்களும் இறுதிப் பத்துப் (10) பாடல்களும் கிடைக்கவில்லை.
  • பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன.
  • பதிற்றுப்பத்தில் பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.
  • பாடப்பகுதிப் பாடலுக்குச் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் படைவீரர் பகைவர் முன் நிரையபாலரை போல (நரகத்து வீரர்கள்) படை வெள்ளமாக நின்றதால் ‘நிரைய வெள்ளம்’ என்று தலைப்பு இடப்பட்டுள்ளது.
  • பாடப்பகுதியான (2ம்) இரண்டாம் (10) பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

குமட்டூரக் கண்ணனார்

  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் குமட்டூரக் கண்ணனார்.
  • குமட்டூரக் கண்ணனார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
  • வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று. இமயத்தில் வில்லினைப் பொறித்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
  • தமிழின் சிறப்பை உலகறியச் செய்வன். கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.

சேர நாடு சிறப்பு

  • உறுபசி ஓவாப்பிணி செறுபகை இன்மையால் புலம்பெயர்ந்து செல்லாது வாழும் மக்கள்!
  • சான்றோர் புகழும் ஆட்சிச் சிறப்பில் துயரம் தொலைந்த புதுவள நன்னாடு!

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சிறப்பு

  • மண்ணுலக உயிர்கள் மாண்புடன் வாழ ஈகையால் நீளும் கை!
  • எதிரிகளை அழிக்கும் கை!
  • இடையறாது பெரும்பொருள் கொடுத்துப் பாதுகாப்பு அளிக்கும் பெருவிழாத் தலைவன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பற்றி குமட்டூரக் கண்ணனார்

  • நற்புகழ் குறையாத வலிமைமிகு உந்தன் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) பண்பு பல நினைந்தும் கண்டும் பெருவியப்பு அடைந்தேன் (குமட்டூரக் கண்ணனார்), மதிமிரண்டு போனேன்! (குமட்டூரக் கண்ணனார்)

பதிற்றுப்பத்து குமட்டூர்க் கண்ணனார்

முதல் 29 அடிகளின் கருத்துச் சுருக்கம்

  • சேரலாதனே! பகை நாட்டில் ஓர் (1) ஆண்டு வரை தங்கிப் போர் செய்வாய்
  • பகைவர்க்கு நரகத் துன்பத்தைத் தரும் உன் வீரர்கள் உன்னுடனே வெள்ளமென வருவர்.
  • பகை நாட்டில் நீ மூட்டிய தீயால் அந்நாட்டின் பழைய அழகு அழிந்தது. காய்ந்த வயல்களில் வீரர்கள் தங்கினர். இத்துன்பத்தை மறந்து உன்னை எதிர்த்து அழிந்த பகைவர் நாடுகளைக் கண்டுவந்தேன்.
  • பல வளங்களை உடைய உன் நாட்டில் தொடர்ச்சியான விழாக்களைக் கொண்டாடும் பழமையான ஊரில் உன் வெற்றி முரசு கொட்டுகிறது.
  • நெடுஞ்சேரலாதனே! கலைஞர்கள் உன்னை வாழ்த்தி இசைக்கின்றனர்.

பாடல் – 15: 30-40

  • திணை      -பாடாண் திணை
  • துறை          -செந்துறைப் பாடாண் பாட்டு
  • வண்ணம்    –  ஒழுகு வண்ணம்
  • தூக்கு –  செந்தூக்கு

பாடாண் திணை

  • ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது பாடாண் திணை ஆகும்.
  • பாடாண் திணையின் நோக்கம் பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளைக் கூறுவது.
  • பாடாண் திணை – ஒருவருடைய புகழ், வலிமை, கொடை ,அருள் போன்ற  நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்

செந்துறை

  • உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் – செந்துறை ஆகும்.
  • செந்துறைப் பாடாண் பாட்டு என்றும் செந்துறை அழைக்கப்படும்.

வண்ணம்

  • ஒலிநய (சந்தம்) வேறுபாடு கொண்ட வண்ணம் ஆகும்.
  • வண்ணந் தாமே நாலைந் தென்ப. -தொல்காப்பியம். பொருள் அதிகாரம். 524

ஒழுகு வண்ணம்

  • ஒழுகிய ஓசையாற் செல்வது ஒழுகு வண்ணம்.
  • ஒழுகு வண்ண மோசையி னொழுகும். தொல்காப்பியம். பொருள் அதிகாரம் 538

தூக்கு

  • தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும்.

செந்தூக்கு

  • செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, அல்லது ஆசிரியப்பாவடியின் இறுதி போன்றோ அமையும்.
  • வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே – தொல்காப்பியம் பொருள் அதிகாரம் 383

 பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார்

நிரைய பாலர் – நிரைய வெள்ளம்

பாடல் – 15: 30-40

நிரைய வெள்ளம் பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி

நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர்

உறையும் பலர் புகழ் பண்பின் நீ புறம்

தருதலின் நோய் இகந்து ஒரீஇய யாணர் நன்னாடும் *

கண்டு மதி மருண்டனென் மண்ணுடை ஞாலத்து

மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக்கை தண்டாக் கைகடும்

துப்பின் புரைவயின் புரைவயின் பெரிய நல்கி ஏமம் ஆகிய

சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை ஓடியா மைந்தநின் பண்புபல நயந்தே *

குமட்டூர்க் கண்ணனார்

பா வகை : நேரிசை ஆசிரியபா

சொல்லும் பொருளும்

  • நிரைய பாலர்  – நரகத்து வீரர்கள் *
  • நிரைய வெள்ளம் – நரகத்து வீரர்கள் கூட்டம்*

பாடலின் பொருள்

  • “சேரலாதனே. உன் குடிமக்கள் எப்பொழுதும் நல்ல செயல்களையே செய்து வருபவர்கள்
  • பசி, பிணி அறியாத அவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயராமல் உன் நாட்டிலேயே சுற்றத்தாரோடு வாழ விரும்புவர். அவ்வாறான குடிமக்களால் நீ போற்றப்படுகிறாய்.
  • இப்பெரிய நிலவுலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இடையறாது கொடுக்கும் பண்புடையவனே, சான்றோர்களுக்கு அரிய பொருள்கள் நல்குவாய்
  • எப்பொழுதும் விழாக்கள் நிகழும் நாட்டிற்கு நீ உரிமை உடையவன்.
  • நெடியோன் போன்ற புகழினை உடைய உன் நாட்டின பகை நாட்டின் அழிவையும் கண்டு வியப்படைகிறேன்”.
  • சேர நாடு செல்வவளம் மிக்கது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்  நாட்டையும் மக்களையும் கண்ணெனக் காத்தான்.
  • ஆகவேதான், அவன் நாட்டு மக்கள் வேற்று நாட்டுக்குச் செல்ல விரும்புவதில்லை.
  • புது வருவாய்ப் பெருக்கமும் ஈத்துவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது? (2)
(A) பெருங்கதை
(B) சீவகசிந்தாமணி
(C) பதிற்றுப்பத்து
(D) பரிபாடல்

விடை தேர்க.
இந்நூல் ‘ஒத்த’ என்னும் அடைமொழி பெற்று வரும்
(A) நற்றிணை
(B) பதிற்றுப்பத்து
(C) குறுந்தொகை
(D) பரிபாடல்

பின்வருவனவற்றுள் சரியானது
I. பதிற்றுப்பத்து என்னும் நூலில் 10 சேர மன்னர்களைப் பற்றி 10 புலவர்கள் பாடியுள்ளனர்
II. முதல் பத்தும் எட்டாம் பத்தும்கிட்டவில்லை
III. முதல் பத்தும் 10 ஆம் பத்தும் கிட்டவில்லை
(A) I கூற்றும் II கூற்றும் சரியே
(B) I கூற்றும் III கூற்றும் தவறு
(C) I கூற்றும் II கூற்றும் தவறு
(D) II கூற்றும் III கூற்றும் சரியே

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!