லாகூர் தீர்மானம் & கிரிப்ஸ் மிஷன்

லாகூர் தீர்மானம்

  • லாகூரில் முஸ்லிம் லீக்கின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • ஏ.கே.பஸ்லுல் ஹக் 1940 மார்ச் 23 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாகூர் தீர்மானத்தை முன்வைத்தார்.
  • முஸ்லிம் லீக்கால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட இத்தீர்மான உரை, முஸ்லிம்களுக்கான ஒன்றுபட்ட தாயகம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திர முஸ்லிம் அரசை உருவாக்க பரிந்துரைத்தது.

கிரிப்ஸ் மிஷன்

  • போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார்.
  • ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின.
  • மார்ச் 9 அன்று ஜப்பான், ரங்கூனையும் தென்கிழக்கு ஆசியா முழுவதையும் கைப்பற்றியது.
  • வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸை 22 மார்ச் 1942 அன்று, காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார்.
  • 1941ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியாவை காப்பாற்றுவதற்காக நேச நாடுகளுக்கு உதவ முன் வந்தனர். காந்தி, நேரு ஆகியோரது கருத்தையும் மீறி CWC பிரிட்டிஷாரை ஆதரிப்பதாகவும், அதனால் இந்தியா காப்பாற்றப்படும் என்ற நோக்கத்திலும் மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதாக அறிவித்தனர். ஆனால் அதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளை விதித்தனர்.
  • கிரிப்ஸ் மிஷனுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது, ஏனெனில் பிரிட்டன் உடனடியாக அதிகாரத்தை மாற்ற விரும்பவில்லை.

கிரிப்ஸ் தூதுக்குழு சலுகைகள்

  1. போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  2. புதிய அரசியலமைப்பை ஏற்கத் தயாராக இல்லாத எந்த மாகாணங்களும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் பிரிட்டனுடன் தனி ஒப்பந்தம் செய்துகொள்ள உரிமை உண்டு.
  3. போரின் போது பாதுகாப்புத்துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய இரண்டும் முன்மொழிவை நிராகரித்தன.
  • காந்தி இந்த முன்மொழிவுகளை ‘திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என்று அழைத்தார்.
  • நேரு குறிப்பிடுகையில் இந்த முன்மொழிவுகளை நான் முதல்முறையாகப் படித்தபோது நான் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
  • பிரித்தானியாவின் போர் முயற்சிகளில் மிகவும் தீவிரமான ஒத்துழைப்பு தேவைப்பட்ட போதும், சுதந்திரப் போராட்டத்தில் அச்சு சக்திகளுடன் கைகோர்க்க வேண்டும் என்ற பிரச்சாரத்திலும் சுபாஷ் சந்திரபோஸின் பிரச்சாரத்திலும் கூட சர்ச்சிலின் அணுகுமுறை மாறவில்லை.
  • மார்ச் 1942 இல் ஜெர்மனியில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஆசாத் ஹிந்த் வானொலியில் போஸ் இந்திய மக்களுக்கு உரையாற்றினார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப் பற்றி காந்தி சிந்தித்த சூழல் இது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!