சூரியா சென் & கல்பனா தத்
சூரியா சென் 1920களின் நடுப்பகுதியில் யுகந்தர், அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கம் அடைந்துவிட, அவற்றிலிருந்து புதிய குழுக்கள் தோன்றின. அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும். சூரியா சென் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன், கதரையும் அணிந்து வந்தவர். சூரியா செனின் குழு இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. சூரியா சென்னின் இந்தியக் குடியரசு இராணுவம் சூரியா […]