இந்தியாவில் வரதட்சணை பற்றி குறிப்பு எழுதி வரதட்சணைக்கான காரணங்கள் விளைவுகள் பற்றி எழுதுக

வரதட்சணை:

  • வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும்.
  • இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
  • வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
  • இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
  • 2012 க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன.
  • சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள்.

காரணங்கள்

  • கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும்
  • வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர்
  • சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை.
  • இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு
  • பரம்பரையாக பின்பற்றி வருதல்.
  • மணப்பெண்ணின் பொருளாதார நிலை.
  • பேராசை

விளைவுகள்

  • வரதட்சணையால் ஏற்பட்ட இறப்புகள்
  • பெண்களுக்கு எதிரான உளவியல் உடலியல் ரீதியான மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட குடும்ப வன்முறைச் செயல்கள்.
  • பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறல் (விதிகள் -14,15,21).
  • பாலின விகித குறைவு
  • மனநல கோளாறுகள்
  • பெண் சிசுக்கொலை
  • ஏழை மக்களை கடனில் சிக்க வைக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!