குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளையும் அரசு எடுத்த எதிர் நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்க

குடும்ப வன்முறை:

  • குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும்.

குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை

  • மாமியார் கொடுமைகள்
  • கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள்
  • கணவனால் மறுக்கப்படும் உரிமைகள்
  • அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை
  • சுதந்திர உரிமை
  • பெண் சிசுக்கொலை கொலைகள்
  • வரதட்சணைக் கொடுமை
  • பெண் கருக்கொலைகள்
  • மனைவியை அடித்துத் துன்புறுத்தல்
  • விதவைகள் கொடுமைகள்
  • குழந்தை மனித உரிமை மீறல்
  • கொலைகள் புரிதல்
  • எரித்தல் போன்றவை

குடும்ப வன்முறையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள்:

  • பெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல்
  • பெண்களுக்கான மனித உரிமை பிரிவுகளை ஏற்படுத்தல்
  • வரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்தல்
  • பெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படும். 6) பெண்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டமை
  • குடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
  • முறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம்
  • தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் – ஆகியன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!