ஜாலியன் வாலாபாக் படுகொலைபகத் சிங்கின் 14ஆம் வயதில் நிகழ்ந்தது.
நவ் ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் பகத் சிங் தன்னை இணைத்துக் கொண்டார்.
தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப் பகத் சிங் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஒரு தனித்த வழி என்ற அளவில் ஒட்டு மொத்த விடுதலை இயக்கத்தின்லட்சியங்களுக்காகப் பகத் சிங்கின் புரட்சிகர தேசியவாத நிலைப்பாடு பெரிதும் பாராட்டப்படுகிறது.
ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் – 1917
1917ல் ரஷ்யாவில் நடந்தேறிய அக்டோபர் புரட்சியும் சோசலிசச் சித்தாந்தங்களும் புரட்சியாளர்களிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது.
சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி ஆகியோரால் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
இர்வின் பிரபு
1926–31 ஆம் ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர் இர்வின் பிரபு.
ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் பெயர் மாற்றம்
ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் 1928செப்டம்பரில் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று பகத் சிங் பெயர் மாற்றம் செய்யதார்.
சந்திரசேகர ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர் ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில் ஒருவராக பகத்சிங் விளங்கினார்.
முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசைத் தூக்கி எறிந்து புரட்சி ஒன்றின் மூலமாக ஒரு சோசலிசச் சமூகத்தை நிலை நாட்டுவதேஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் குறிக்கோளாகும்.
ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷனின் நடவடிக்கைகள்
1928டிசம்பர் மாதத்தில் லாலா லஜபதி ராய் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டது.
லாகூரில் சாண்டர்ஸினைக் கொன்றது போன்ற பல நடவடிக்கைகளில் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஈடுபட்டது.
லாலா லஜபதி ராய் மீது கொடுந் தாக்குதல் நடத்திய லாகூர் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்.
லாலா லஜபதி ராயின் மரணத்திற்கும் பொறுப்பானலாகூர் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்டுக்குப் பதில் தவறுதலாக சாண்டர்ஸ் பலியானார்.
கொடுஞ் சட்டங்கள்
தொழிற் சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்குஇருசட்டங்களை அரசு இயற்றப்பட்டது.
1928ஆம் ஆண்டின் தொழிற் தகராறுகள் சட்டம் இயற்றப்பட்டது.
1928ஆம் ஆண்டின் பொது மக்கள் பாதுகாப்புமசோதாசட்டம் இயற்றப்பட்டது.
இரண்டாவது லாகூர் சதி வழக்கு – (1928 – 1931)
ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திர நாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர்,
இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு(1928 – 1931) என்று அறியப்படுகிறது.
சிறையின் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜதீந்திரநாத் தாஸ் 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
லாகூர் சதி வழக்கின் விசாரணைகள் முடியும் வரை குண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மீரட் சதிவழக்கு – 1929
1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்கு தான் அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் சதிவழக்குகளிலும்பெரிதும்புகழ் பெற்றதாகும்.
பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், பூனா, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் போன்ற பகுதிகளிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது.
அவர்கள் அனைவரும்இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின்உறுப்பினர்கள் அல்ல.
எனினும் அவர்களில் பெரும்பாலானோர்தொழிற்சங்கச்செயல்பாட்டாளர்கள் ஆவார்கள்.
அவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் இந்திய தேசிய காங்கிரசைச்சேர்ந்தவர்கள்.
பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகியோர் பிரிட்டானியகம்யூனிஸ்டுகள் ஆவர்.
மீரட் சதி வழக்கில் பிரிட்டானியகம்யூனிஸ்டுகள்மூவரும்கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 32 தலைவர்களும் மீரட்டுக்கும் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீரட் சதி வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 121ஏபிரிவின்கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
’நிலை குலைவிக்கும் விஷயங்கள்’ (subversive materials) என்று விவரிக்கப்பட்ட புத்தகங்கள், கடிதங்கள், போன்ற கணிசமான ஆவணங்கள்பறிமுதல் செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையை மீரட் நகரில் நடத்துவதென்று பிரிட்டானிய அரசு தீர்மானித்தது.
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பிடிபட்ட பம்பாய் போன்ற இடங்களில் அல்லாமல், எனவே அவர்கள் நடுவர்விசாரணை என்ற சலுகையைப் பெற முடிந்தது.
நடுவர் விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை உருவாக்கக் கூடும் என்று பிரிட்டானிய அரசு அஞ்சியது.
பகத்சிங்கின் குண்டுவீச்சு
பகத் சிங் 1929ஏப்ரல் 8ல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசினார்.
அந்தக் குண்டுகள் எவரையும்கொல்லவில்லை.
ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்ட செயலாகச் செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாகப் புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக தொழிற் தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும்நாளை அவர்கள் இதற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
“நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?” என்னும் நூலிலிருந்து பகத்சிங்.
”நான் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய முந்தைய நம்பிக்கைகளும் தீர்மானங்களும் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்திற்கு உள்ளானது – பகத் சிங்
மிகவும் முக்கியமாக நமது முன்னோடிகளிடையே நிலவிய வன்முறைச் செயல்பாடுகள் மீதானமோகம் தீவிரமான சித்தாந்தங்களின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டது – பகத் சிங்
இதில் மாயத்திற்கு இடமில்லை. கண்மூடித்தனமான நம்பிக்கைக்கும் இடமில்லை. யதார்த்தமான அணுகுமுறையே நமது ஒழுங்கு முறை ஆனது – பகத் சிங்
தீவிரமான தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே வன்முறையைக் கையாள்வது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும் – பகத் சிங்
அனைத்து வெகுஜன இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கையாக அஹிம்சைஇருக்கும் – பகத் சிங்
வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. நாம் எந்த லட்சியத்திற்காகப் போரிட்டோமோ அதன் தூய கருதுகோளே மிக முக்கியமானது” – பகத் சிங்
பஞ்சாப் மாநில ஆளுநருக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்கடிதம்
தேசத்தின் விடுதலைக்காக மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்திலும் இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையையும் துணிவையும் காட்டிப் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பினர்.
அந்தக் கடிதத்தில் “முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தப் போர் எங்களுடன் தொடங்கியதுமல்ல, எங்கள் வாழ்க்கையுடன் முடிவு பெறப்போவதுமல்ல.
நாங்கள் போர் தொடுத்ததால் போர்க் கைதிகள் ஆனோம் என்று உங்கள் நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
அப்படியானால் எங்களைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள்” என்று கோரப்பட்டிருந்தது.
‘புரட்சி ஓங்குக’ (Inquilab Zindabad)
‘புரட்சி ஓங்குக’ (Inquilab Zindabad) என்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் முழக்கமிட்டனர்.
புரட்சி – பகத்சிங் விளக்கம்
பகத்சிங்கையும் அவருடன் இருந்த தேச பக்தர்களையும் புரட்சிகர தேசியவாதிகள் எனச் சில குறிப்புகள் விவரிக்கின்றன. அது ஒரு தவறான கருதுகோள் ஆகும்.
வரலாற்றுப் புகழ்பெற்ற பகத்சிங், பிற புரட்சிகர தேசியவாதிகளிடமிருந்து அவருடைய குழுவினர் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
”புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கைத் துப்பாக்கியால் சுடுவதோ அல்ல.
புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும்.
சுதந்திரம் என்பது அனைவரின் அழியாத பிறப்புரிமை ஆகும்.
சமூகத்தின் உண்மையான ஆதரவாளர்கள்உழைப்பாளிகள் ஆவர்.
இந்தப் புரட்சியின் பலி பீடத்தில் நாம் மாபெரும் லட்சியத்துக்காக அளிக்கும் எந்தத் தியாகமும் அதற்கு முன் பெரிதல்ல”
இர்வின்பிரபுபயணம்செய்தரயிலைக் கொளுத்தும் முயற்சி
1926–31 ஆம் ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர் இர்வின் பிரபு.
1929, டிசம்பரில் இர்வின் பிரபு பயணம் செய்து கொண்டிருந்த ரயிலைக் கொளுத்தும் முயற்சியிலும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஈடுபட்டது.
1930ஆம் ஆண்டில் பஞ்சாபிலும் உத்தரப்பிரதேசத்திலும்ரயிலைக் கொளுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
லாகூர் சதிவழக்கில்மரண தண்டனை – 1930
லாகூர் சதி வழக்கில் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
லாகூர் சதிவழக்கில்பகத்சிங் தூக்கு
லாகூர் சதி வழக்கில் 1931மார்ச் 23 அன்று அதிகாலையில் லாகூர் சிறைச் சாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.