கான்பூர் சதி வழக்கு – 1924

அறிமுகம்

  • 1920-30களில் உண்டான முற்போக்கு எழுச்சி, முற்றிலும் வேறுபட்ட தேசியவாதம் ஆகும்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது மற்றும் கான்பூர் சதி மற்றும் மீரட் சதி வழக்குகளோடு கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது.
  • பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் சூரியா சென் போன்ற பெரிய புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்தனர்.
  • இளம் பெண்களும் புரட்சிகர இயக்கங்களில் பங்கு பெற்றனர். அவர்களில் ஒருவர் கல்பனா தத் ஆவார்.
  • இந்திய குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த கல்பனா தத் வங்காளத்தில் சிட்டகாங் படைத் தளத்தில் தொடர்ச்சியான தாக்குதலை ஏற்பாடு செய்தார.
  • அடிப்படை உரிமை மற்றும் கடமை தீர்மானங்கள் காங்கிரசின் கராச்சி கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

  • 1920 களின் பிற்பகுதியில் இடதுசாரிகளின் செல்வாக்கு செலுத்தியது.
  • 1920களின் பிற்பகுதி ஏராளமான தொழிலாளர் எழுச்சிகளைக் கண்டது.
  • 1929–39 வரை மாபெரும் பொருளாதார மந்த நிலையின் சகாப்தம் நீண்டது.

இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சி – 1920

  • இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது முதலில் உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் உருவாக்கப்பட்டது.
  • இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது எம்.என். ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா, முகமது அலி, முகமது ஷாபிக் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • பின்னர் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது சோவியத் யூனியனிலும் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒரு புதிய புரட்சிகர தேசியவாத சகாப்தம் தோன்ற இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சி வழிவகுத்தது.

புரட்சிகர தேசியவாதக் குழு பெஷாவருக்கு வருகை

  • 1921 ஜூன் 3ல் முதல் புரட்சிகர தேசியவாதக் குழுவினர் பெஷாவருக்கு வருகை தந்தனர்.
  • ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான போல்ஷ்விக்குகள் கலகம் விளைவிப்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்று கைது செய்யப்பட்டனர்.

தொடர் சதி வழக்குகள்

  • 1922-1927ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புரட்சிகர தேசியவாதிகள் மீது தொடர்ச்சியாக 5 சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன.
  • சதி வழக்குகளில் முதலாவது பெஷாவர் சதி வழக்கு – 1922 ஆகும்.
  • 1924ஆம் ஆண்டில் கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு தொடுக்கப்பட்டது.
  • 1929ஆம் ஆண்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது.

 எம். சிங்காரவேலர்

  • எம். சிங்காரவேலர் (18 பிப்ரவரி 186011 பிப்ரவரி 1946) மதராசில் பிறந்தார்.
  • எம். சிங்காரவேலர் இளமைக் காலத்தில் புத்த மதத்தைத் தழுவியவர்.
  • பிற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் பலரைப் போன்று எம். சிங்காரவேலரும் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டார்.
  • எனினும், சில காலத்திற்குப் பிறகு அவர் புரட்சிகர தேசியவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
  • தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை எம். சிங்காரவேலர் திரு. வி. கல்யாண சுந்தரத்துடன் இணைந்து தோற்றுவித்தார்.
  • 1923ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன் முறையாக நாட்டில் மே தினத்தைக் எம். சிங்காரவேலர் கொண்டாடினார்.
  • 1928ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) எம். சிங்காரவேலர் ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.

 கான்பூர் சதி வழக்கு, 1924

  • பல காலத்திற்கு முன்பே தொழிற்சாலைகள் வந்து விட்ட பகுதி லாகூர்.
  • போன்ற நகரங்களிலும் கான்பூர் போன்ற தொழில் மையங்களிலும் புரட்சிகர தேசியவாதம் பரவியது.
  • போல்ஷ்விசம் என்று அழைக்கப்பட்டது அரசியல் புரட்சிகர தேசியவாதம்.
  • 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதி வழக்கு அத்தகையதொரு நடவடிக்கையே ஆகும்.
  • கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் ஆவர்.
  • கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 6 மாத கால அளவில் கைது செய்யப்பட்டனர்.
  • கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் இந்திய தண்டனைச் சட்டம் 121 பிரிவின் கீழ் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
  • வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை முற்றிலும் பிரித்து பிரிட்டானிய இந்தியாவின் பேரரசரின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்” என்று கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
  • இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை கான்பூர் சதி வழக்கு விசாரணையும் சிறைத் தண்டனையும் ஓரளவுக்கு ஊட்டியது.

 கம்யூனிஸ்ட்களின் பாதுகாப்புக் குழு – 1925

  • கம்யூனிஸ்ட்களின் பாதுகாப்புக் குழு’ ஒன்று கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களை அமர்த்தவும் நிதி திரட்டவும் உருவாக்கப்பட்டது
  • 1925 டிசம்பரில் கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாடு ஒன்று நடந்தேறியது.
  • 1925 டிசம்பர் கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து சிங்காரவேலர் சென்று கலந்து கொண்டார்.
  • அங்கிருந்து தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு முறைப்படி நிறுவப்பட்டது.

 இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் கட்சி – 1925

  • இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925ல் முறைப்படி பம்பாயில் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் அப்போது சோசலிச லட்சியங்களை ஏற்றுக் கொண்ட புரட்சிகரக் குழுக்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல.
  • இந்துஸ்தான் புரட்சிகர சோசலிசக் கூட்டமைப்பைச் சார்ந்தவர் பகத் சிங்

கான்பூர் சதி வழக்கு – நீதிபதி ஹோம்ஸ் விசாரணை

  • கான்பூர் சதி வழக்கு மாட்சிமை பொருந்திய அமர்வு நீதிபதி ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
  • சௌரி சௌரா வழக்கின் போது கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியவர் ஹோம்ஸ்.
  • சௌரி சௌரா வழக்கில் 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர் நீதிபதி ஹோம்ஸ்.

கான்பூர் சதி வழக்கு குற்றப் பத்திரிகை

  • கான்பூர் சதி வழக்கில் ஆரம்பத்தில் 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
  • குற்றம் சுமத்தப்பட்டவர்கள் – 13 பேர்

1) முசாபர் அகமது 2) சவுகத் உஸ்மானி 3) எஸ்.ஏ. டாங்கே
4) குலாம் ஹுசைன் 5) எம்.என்.ராய்  6) ஆர்.எல்.சர்மா
7)  எம். சிங்காரவேலர் 8) நளினி குப்தா
9) சத்ய பக்தா 10) ஷமுத்தின் ஹாசன்
11) சம்பூர்ண நந்தா 12) டாக்டர் மணிலால் 13) எம். ஆர். எஸ். வேலாயுதன்

  • குற்றப் பத்திரிகை தாக்கல்8 பேர்

1) முசாபர் அகமது 2) சவுகத் உஸ்மானி  3) எஸ்.ஏ. டாங்கே
4) குலாம் ஹுசைன்  5) எம்.என்.ராய்    6) ஆர்.எல்.சர்மா
7) எம். சிங்காரவேலர் 8) நளினி குப்தா

  • குலாம் ஹுசைன் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டதால் விடுவிக்கப்பட்டார்.
  • ஜெர்மனியில் எம். என். ராய், பாண்டிச்சேரியில் (ஒரு பிரெஞ்சுப் பிரதேசம்) ஆர். எல். சர்மா இருந்ததால் நேரில் வரவழைக்காமல் குற்றப் பத்திரிகைகள் அனுப்பிவைக்கப்பட்டன.
  • மோசமான உடல் நிலை காரணமாகப் சிங்காரவேலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
  • கடைசியாக, கான்பூர் சதி வழக்கு இறுதி குற்றப் பட்டியலில் 4 மட்டுமே எஞ்சியிருந்தனர்.
  • கான்பூர் சதி வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கபட்டவரகள் முசாபர் அகமது, சவுகத் உஸ்மானி, எஸ். ஏ. டாங்கே, நளினி குப்தா ஆகியோர்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!