தாதாபாய் நௌரோஜி

  • இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படுபவர் – தாதாபாய் நௌரோஜி
  • தாதாபாய் நௌரோஜி உருவாக்கிய அமைப்புகள்
    • 1865ல் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society)
    • 1866ல் கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association)
  • தாதாபாய் நௌரோஜி வகித்த பதவிகள்
    • 1870ல் தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திறகும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 1892ல் தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 3 முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாதாபாய் நௌரோஜியும் சுரண்டல் கோட்பாடும்

  • 1901ல் ‘வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்’ எனும் புத்தகத்தை தாதாபாய் நௌரோஜி எழுதினார்.
  • தாதாபாய் நௌரோஜி ‘வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்’ எனும் புத்தகத்தில் செல்வச் சுரண்டல் கோட்பாட்டை முன் வைத்தார்.
  • எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நனுக்காகச் செலவு செய்யப்படுகிறது” எனக் கூறியவர் – தாதாபாய் நௌரோஜி
  • தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயர்களால் தாயகக் கடடணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக கூறினார்.
  • 1835-1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்படையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படடதாகவும் ஆனால் அந்த அளவிற்குப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் தாதாபாய் நௌரோஜி கூறினார்.
  • தாயகக் கடடணத்தில் (Home Charges) சேருவது
    • லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு
    • இரும்புப் பாதைத் துறையில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி
    • பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் ஓய்வூதியம்
    • நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனுக்கு வட்டி

 

2 thoughts on “தாதாபாய் நௌரோஜி”

  1. Pingback: தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள் - Exam Machine

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!