TNPSC TAMIL MATERIALS

சிறுபாணாற்றுப்படை- 7 – நள்ளி

நள்ளி (நளிமலை நாடன்) – நெடுங்கோடு மலை, ஊட்டி, உதகமண்டலம், கோவை மாவட்டம் நளிமலை – நள்ளி – (103-107) பாடல் கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் (நள்ளி) துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளியும் சொல்லும் பொருளும் கரவாது – மறைக்காது துஞ்சு – தங்கு பாடலின் பொருள் நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட்செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு […]

சிறுபாணாற்றுப்படை- 7 – நள்ளி Read More »

சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி – தகடூர், பூரிக்கல், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி) தகடூர் – அதிகன்-(99-103) பாடல் மால்வரைக் கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த (அதிகன்) உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் அரவக் கடல் தானை அதிகனும் சொல்லும் பொருளும் மால்வரை – பெரியமலை, கரியமலை பாடலின் பொருள் நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின்

சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி Read More »

சிறுபாணாற்றுப்படை- 5- ஆய்

ஆய் அண்டிரன் – பொதிய மலை, அகத்தியர் மலை, நெல்வேலி குற்றாலம், பாபநாசம் பொதியமலை ஆய் -(95-99) பாடல் நிழல் திகழ் நீலம், நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த (ஆய்) சாவந் தாங்கிய, சாந்துபுலர்  திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும் சொல்லும் பொருளும் நிழல்  – ஒளி வீசும் நீலம் – நீலமணி நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு ஆலமர் செல்வன் – சிவபெருமான் அமர்ந்தனன் – விரும்பினன் சாவம் – வில்

சிறுபாணாற்றுப்படை- 5- ஆய் Read More »

சிறுபாணாற்றுப்படை- 4 -மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி – மலாடு, விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர், தென்பெண்ணை ஆற்றங்கரை மலையமான் நாடு – காரி – (91-95) பாடல் கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையகம் மருள ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த (காரி) அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல் தொடித் தடக்கைக் காரியும் சொல்லும் பொருளும் கறங்கு  – ஒலிக்கும் வாலுளை – வெண்மையான தலையாட்டம் மருள் – வியக்க பாடலின் பொருள் உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும்

சிறுபாணாற்றுப்படை- 4 -மலையமான் திருமுடிக்காரி Read More »

சிறுபாணாற்றுப்படை – 3 பாரி

பாரி – பறம்புமலை, பிரான்மலை 300 ஊர்கள், சிவகங்கை மவட்டம், சிங்கம்புணரி பறம்பு மலை -பாரி – (87-91) பாடல் சுரும்பு உண நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் அருவி வீழும் சாரல் பறம்பின் கோமான் பாரியும் சொல்லும் பொருளும் பறம்பு    –  பறம்பு மலை சுரும்பு   – வண்டு பிறங்கு – விளங்கும் பாடலின் பொருள் வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும்

சிறுபாணாற்றுப்படை – 3 பாரி Read More »

சிறுபாணாற்றுப்படை- 2 பொதினி மலை

பேகன் – பொதினி, ஆவினன்குடி, பழனி, திண்டுக்கல் மாவட்டம் பொதினி மலை – பேகன்-(84-87) வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் (பேகன்) அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் ** பா வகை – நேரிசை ஆசிரியப்பா சொல்லும் பொருளும் வளமலை – பழநி மலை கவாஅன் – மலைப்பக்கம் கலிங்கம் – ஆடை பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலானது குளிரால் நடுங்கும் என்று எண்ணித்தன் மனத்தில்

சிறுபாணாற்றுப்படை- 2 பொதினி மலை Read More »

சிறுபாணாற்றுப்படை – நத்தத்தனார் 1

சிறுபாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத் தத்தனார். ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் சிறுபாணாற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை 269 அடிகளை உடைய நூல். சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.. பரிசுப்பெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட பாண்னை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக சிறுபாணாற்றுப்படை அமைந்துள்ளது. வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. சிறுபாணன் பயணம் சிறுபாணன் பயணம் பற்றிய குறிப்பை மா.இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி

சிறுபாணாற்றுப்படை – நத்தத்தனார் 1 Read More »

பரிபாடல்-கீரந்தையார்

பரிபாடல் பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பரிபாடல் நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் (இசைபாடல்) ஆகும். பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. பாடப் பகுதியிலுள்ள பரிபாடல் பாடலை எழுதியவர் கீரந்தையார். நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி பாடல் – 2: 4-12 விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, * உரு

பரிபாடல்-கீரந்தையார் Read More »

புறநானூறு- 2 காவற்பெண்டு

காவற்பெண்டு காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் காவற்பெண்டு. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்கவர். சங்ககாலப் பெண்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் காவற்பெண்டு பாடியுள்ளார். காவற்பெண்டு பாடியது ஒரே ஒரு (1) பாடல் அது புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது பாடல் –86 சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் யாண்டு உளனோ என  வினவுதி என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஒரும் புலி

புறநானூறு- 2 காவற்பெண்டு Read More »

புறநானூறு- 1 ஒளவையார்

ஒளவையார் அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றார், அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர். நமக்குக் கிடைத்துள்ள ஔவை பாடிய 59 பாடல்கள் விபரம் அகநானூற்றில் –  4 நற்றிணை – 7 குறுந்தொகையில் – 15 புறநானூற்றில் – 33 மொத்தம்  – 59 பாடல் – 206 வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப்

புறநானூறு- 1 ஒளவையார் Read More »

error: Content is protected !!